Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 1
Class: 6Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5
Fill in the blanks. (Answer all questions.)
1.ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….. அ) ஆழமான + கடல் ஆ) ஆழ் + கடல் இ) ஆழ + கடல் ஈ) ஆழம் + கடல்[1]
2.போர்க்களத்தில் வெளிப்படும் குணம் …………….. அ) மகிழ்ச்சி ஆ) துன்பம் இ) வீரம் ஈ) அழுகை[1]
3.நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ………….. ஆக இருக்கும். அ) மகிழ்ச்சி ஆ) கோபம் இ) வருத்தம் ஈ) அசதி[1]
4.தாய் மொழியில் படித்தால் …………. அடையலாம். அ) பன்மை ஆ) மேன்மை இ) பொறுமை ஈ) சிறுமை[1]
5.போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……….. அ) போகி + பண்டிகை ஆ) போ + பண்டிகை இ) போகு + பண்டிகை ஈ) போகிப் + பண்டிகை[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24
Answer briefly. (Answer all questions.)
6.எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம் மாணாசெய் தலை யாமை.[2]
7.வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?[2]
8.முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?[2]
9.சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……. அ) சிலம்பதிகாரம் ஆ) சிலப்பதிகாரம் இ) சிலம்புதிகாரம் ஈ) சில பதிகாரம்[2]
10.அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.[2]
11.பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை?[2]
12.குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) குற்றமில்லாதவர் ஆ) குற்றம் இல்லாதவர் இ) குற்றமல்லாதவர் ஈ) குற்றம் அல்லாதவர்[2]
13.இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது? அ) ஏழ்மை ஆ) நேர்மை இ) உழைப்பு ஈ) கல்லாமை[2]
14.இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளைக் கேட்டு மகிழ்க.[2]
15.எப்படி உண்பது விரும்பத்தக்கது அன்று?[2]
16.பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் அ) ஆடு மேய்க்க ஆள் இல்லை ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை இ) வழி தெரியவில்லை ஈ) பேருந்து வசதியில்லை[2]
17.ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்த து ஒருநாள்.[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15
Answer in detail. (Answer all questions.)
18.‘கல்விக்கண் திறந்த காமராசர்’ இத்தொடரிலுள்ள எழுத்துகளை மட்டும் பயன்படுத்தி புதிய சொற்களை உருவாக்குங்கள். (எ.கா.) கண்.[5]
19.செய்தித்தாளில் விளையாட்டுச் செய்தி ஒன்றைப் படித்து, அதில் இடம்பெற்றுள்ள நால்வகைச் சொற்களை எழுதுக.[5]
20.பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் எனில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?[5]
🔑 Show Answer Key — Set 1
- 1. ஈ) ஆழம் + கடல்
- 2. இ) வீரம்
- 3. (விடை : ஈ) அசதி)
- 4. (விடை: ஆ) மேன்மை)
- 5. அ) போகி + பண்டிகை
- 6. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை.
- 7. வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் : (i) தலையில் சிறகுகள் வளர்தல். (ii) இறகுகளின் நிறம் மாறுதல். (iii) உடலில் கற்றையாக முடி வளர்தல்.
- 8. உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவை முதல் எழுத்துகள் என்று அழைக்கப்படுகிறது.
- 9. (விடை: ஆ) சிலப்பதிகாரம்)
- 10. அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
- 11. பழத்தின் இயல்பு கொடுப்பது; வேரின் இயல்பு பெறுவது.
- 12. அ) குற்றமில்லாதவர்
- 13. ஆ) நேர்மை
- 14. இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளை மாணவர்கள் தாங்களாகவே கேட்டு அறிந்துகொள்ளுதல் வேண்டும்.
- 15. உண்ணப்படும் பொருள் அமிழ்தமே ஆனாலும் தன்னை நோக்கி வந்த விருந்தினர் இருக்கும் போது தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.
- 16. ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
- 17. ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.
- 18. 1. கல்வி 2. கவி 3. கதி 4. ராசர் 5. விண் 6. திற 7. கா 8. வில் 9. கல் 10. திறந்த முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க
- 19. இந்தியா-இலங்கை இடையிலான உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் யுவராஜ்சிங்கிற்கு 3 முன்பாக இறங்கி 91 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற செய்த தோனியின் செயல் சாலச் சிறந்த ஆட்டம் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள். விடை: 1. இந்தியா, இலங்கை, யுவராஜ் சிங், தோனி – பெயர்ச்சொல் 2. அடித்தது, செயல் – வினைச்சொல் 3. இடையிலான – இடைச்சொல் 4. சாலச் சிறந்த – உரிச்சொல்
- 20. பறவைகளும் விலங்குகளும் சுதந்திரமாக வாழ நாம் செய்ய வேண்டுவன : சுற்றுச்சூழல் என்பது இயற்கையாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று. இது பறவை, தாவரம், விலங்கு மட்டுமின்றி மனிதனையும் சார்ந்ததாகும். பறவைகள், விலங்குகள் மனித வாழ்க்கையோடு ஒன்றியது. ஒன்றையொன்று சார்ந்து இருப்பவை. அப்படிப்பட்ட பறவைகள், விலங்குகள் வாழ நாம் வழி வகை செய்ய வேண்டும்.(i) இவற்றின் வாழ்விடங்களான காடுகளை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். சனில் (ii) பறவைகளைப் பிடித்துக் கூண்டுக்குள் அடைக்காமல் அவற்றைச் சிறகடித்து வானில் பறக்கவிட வேண்டும். (iii) பறவை, விலங்குகளை வேட்டையாடக் கூடாது. (iv) விலையுயர்ந்த பட்டுப்புடவைக்காகப் பல பட்டுப் புழுக்களை அழிக்கிறோம். அவற்றைச் செய்யக் கூடாது. (v) வீட்டு விலங்குகளிடம் அன்பாகப் பழக வேண்டும். (vi…
Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 2
Class: 6Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5
Fill in the blanks. (Answer all questions.)
1.நாம் …………… சொல்படி நடக்க வேண்டும். அ) இளையோர் ஆ) ஊரார் இ) மூத்தோர் ஈ) வழிப்போக்கர்[1]
2.பிறரிடம் நான் ………….. பேசுவேன். அ) கடுஞ்சொல் ஆ) இன்சொல் இ) வன்சொல் ஈ) கொடுஞ்செல்[1]
3.கிடைக்கும் பொருள்களின் …………..க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம். அ) அளவை ஆ) மதிப்பை இ) எண்ணிக்கையை ஈ) எடையை[1]
4.‘தொன்மை’ என்னும் சொல்லின் பொருள் ……………….. அ) புதுமை ஆ) பழமை இ) பெருமை ஈ) சீர்மை[1]
5.‘சித்தம்’ என்பதன் பொருள் . ……….. அ) உள்ளம் ஆ) மணம் இ) குணம் ஈ) வனம்[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24
Answer briefly. (Answer all questions.)
6.அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …….. அ) அறிவுடைமை ஆ) அறிவுஉடைமை இ) அறியுடைமை ஈ) அறி உடைமை[2]
7.நீங்கள் விரும்பும் இயற்கைப் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக.[2]
8.காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் அ) காவிரிக்கரை ஆ) வைகைக்கரை இ) கங்கைக்கரை ஈ) யமுனைக்கரை[2]
9.இக்கதையில் அமைதி எங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது?[2]
10.சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து எது?[2]
11.எதை நம்பி வாழக் கூடாது?[2]
12.நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்.[2]
13.ஒருவர்க்குச் சிறந்த அணி .. அ) மாலை ஆ) காதணி இ) இன்சொல் ஈ) வன்சொல்[2]
14.பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக. ஆறு சக்கரம் நூறு வண்டி அழகான ரயிலு வண்டி மாடு கன்னு இல்லாமத்தான் மாயமாத்தான் ஓடுது உப்புப் பாரம் ஏத்தும் வண்டி உப்பிலிப் பாளையம் போகும் வண்டி.[2]
15.பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?[2]
16.வள்ளலார் பசிப்பிணியை நீக்க என்ன செய்தார்?[2]
17.கழுத்தில் சூடுவது ……. அ) தார் ஆ) கணையாழி இ) தண்டை ஈ) மேகலை[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15
Answer in detail. (Answer all questions.)
18.காமராசரின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்வு ஒன்றினை அறிந்து வந்து வகுப்பறையில் பேசுக.[5]
19.தனக்குப் பெரும் வருமானத்தைத் தந்த காலணியைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென மாரி நினைத்தது ஏன்? வகுப்பில் கலந்துரையாடுக.[5]
20.பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.[5]
🔑 Show Answer Key — Set 2
- 1. இ) மூத்தோர்
- 2. ஆ) இன்சொல்
- 3. ஆ) மதிப்பை
- 4. (விடை: ஆ) பழமை)
- 5. அ) உள்ளம்
- 6. அ) அறிவுடைமை
- 7. (refer textbook)
- 8. அ) காவிரிக்கரை
- 9. பிரச்சனையும் போராட்டமும் ஆரவாரமும் இருக்கும் இடத்தில் இருந்தும், எதற்கும் கலங்காமலும், தன்னை எதுவும் பாதிக்கவிடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி என்று இக்கதையில் கூறப்படுகிறது.
- 10. ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும். மொழியை ஆள்வோம் கண்டதும் கேட்டும் மகிழ்க.
- 11. பிறருடைய உழைப்பை நம்பி வாழக்கூடாது.
- 12. நீதிநூல் – பொருட்பெயர்
- 13. இ) இன்சொல் பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக
- 14. இயல்பு நவிற்சி அணி.
- 15. பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை (i) பொருட்பெயர் (ii) இடப்பெயர் (iii) காலப்பெயர் (iv) சினைப்பெயர் (v) குணப்பெயர் (vi) தொழிற்பெயர்
- 16. வள்ளலார் மக்களின் பசிப்பிணியை நீக்க தம் பெருமுயற்சியால் வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார். இவரின் மனிதநேயச் செயல் வடலூரில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- 17. அ) தார்
- 18. ஒருமுறை பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். அப்பொழுது காங்கிரஸ் தொண்டர்களும் அவர் மீது அன்பு கொண்ட பொதுமக்களும் மாலையணிவித்து மரியாதை 3 செலுத்த வந்திருந்தனர். வந்திருந்தவர்களில் ஓர் ஆசிரியர் பொதுமக்களின் இடையில் வந்து நின்றார். அந்த ஆசிரியரைப் பார்த்த காமராசர், “என்னய்யா! படிக்காதவங்களுக்குப் போய் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நீங்கள் படிக்காதவனுக்கு மாலை போட வந்திருக்கிறீர்களே?” என்றார். இதைக் கேட்டதும் அந்த ஆசிரியரின் கண்களில் கண்ணீர் மல்கியது. காமராசர், அவரைப் பார்க்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரும்போது அவர் தன் உதவியாளர்களை அழைப்பார். தெருவில் போகிற முடிவெட்டுகிறவர், துணி வெளுக்கிறவர் என மிகச் சாதாரண வாழ்க்கை நடத்தும் ஏழைகளைக் கூப்பிடச் சொல்லுவார். அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முன்பாகவே அந்த ஏழ…
- 19. மாணவன் 2 : மாரி ஏழ்மையில் வாழும் ஒரு தொழிலாளி. அவரிடம் செல்வம் இல்லையென்றாலும் நேர்மை இருந்தது. அதனால் அவர் அவ்வாறு நினைத்தார். மாணவன் 1 : அந்தக் காலணியை வைத்து அவர் பெரும் பணம் சம்பாதித்து உள்ளார். அதேபோல் சம்பாதித்துக் கொண்டு நிம்மதியாக இருந்திருக்கலாமே? மாணவன் 2 : பிறர் பொருளைத் தான் வைத்திருக்கக்கூடாது என்று எண்ணி, அந்தக் காலணிக்கு உரியவர் சிறுமி எனவும், குழந்தையின் மனம் வருந்தும் எனக்கூட எண்ணியிருக்கலாம். மாணவன் 1 : அதுவும் சரிதான். சிறுமி வளர்ந்து விட்டால் அந்தக் காலணி அவளுக்குப் பொருந்தாது. பிறகு அது வீணாகவே இருக்கும் எண்ணி இருப்பார். மாணவன் 2 : மாரி மனசாட்சிக்குப் பயந்தும், பிறர் பொருளைத் தாம் வைத்திருக்கக்கூடாது என்றும் அந்தக் காலணியை வைத்துப் பெரும்பொருள் ஈட்டியதாலும் அவருடைய மன…
- 20. ஆ ழ்க்கடல் – ஆ ய்வுகள் நீ ல – நி லவில் எ லும்பு – எ ந்திர மனிதன் உ றுப்பை – உ யிரும் அ ணுவை – அகிலம் உ லகம் – உ ள்ளங்கை செ யற்கை – செ ய்தி நா ளை – ந கரம் வே ளை – வி ண்
Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 3
Class: 6Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5
Fill in the blanks. (Answer all questions.)
1.தானென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………… அ) தானெ+என்று ஆ) தான்+என்று இ) தா+னென்று ஈ) தான்+னென்று[1]
2.அன்னை தெரசாவிற்கு ………….. க்கான நோபல் பரிசு’ கிடைத்தது அ) பொருளாதாரம் ஆ) இயற்பியல் இ) மருத்துவம் ஈ) அமைதி[1]
3.‘அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………. அ) அவ்வு + ருவம் ஆ) அ + உருவம் இ) அவ் + வுருவம் ஈ) அ + வுருவம்[1]
4.‘கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………. அ) கண் + அறி ஆ) கண்டு + அறி இ) கண்ட + அறி ஈ) கண் + டறி[1]
5.நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………… அ) நிலயென்று ஆ) நிலவென்று இ) நிலவன்று ஈ) நிலவுஎன்று[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24
Answer briefly. (Answer all questions.)
6.எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) எதிரலிக்க ஆ) எதிர்ஒலிக்க இ) எதிரொலிக்க ஈ) எதிர்ரொலிக்க[2]
7.வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ) வணிகசாத்து ஆ) வணிகம்சாத்து இ) வணிகச்சாத்து ஈ) வணிகத்துசாத்து[2]
8.ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்துகள் வரிசையில் மொழிமுதல் எழுத்துகளாக அமைபவை எவை? அவ்வெழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களை அகராதியைப் பார்த்து எழுதுக.[2]
9.அமுதசுரபியின் சிறப்பு யாது?[2]
10.மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?[2]
11.இதுவரை எத்தனை கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? அவை யாவை?[2]
12.செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?[2]
13.எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் அ) மனித வாழ்க்கை ஆ) மனித உரிமை இ) மனித நேயம் ஈ) மனித உடைமை[2]
14.பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொற்களை எவ்வாறு வழங்குகிறோம்?[2]
15.காணி என்பது நில அளவைக் குறிக்கும் சொல். இதுபோல நிலத்தை அளக்கப் பயன்படும் சொற்களைப் பட்டியலிடுக.[2]
16.உயர்வு நவிற்சி அணி என்பது யாது?[2]
17.கடல் பாட்டில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன யாவை?[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15
Answer in detail. (Answer all questions.)
18.முதலுதவி பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவற்றுள் சிலவற்றையேனும் அறிந்து கொள்க.[5]
19.நானிலம் படைத்தவன் பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக. எதுகை :[5]
20.சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?[5]
🔑 Show Answer Key — Set 3
- 1. ஆ) தான் +என்று
- 2. ஈ) அமைதி
- 3. ஆ) அ + உருவம்
- 4. ஆ) கண்டு + அறி
- 5. (விடை: ஆ) நிலவென்று)
- 6. இ) எதிரொலிக்க
- 7. இ) வணிகச்சாத்து
- 8. (refer textbook)
- 9. அமுதசுரபியில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனைப் பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.
- 10. மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது அனுபவம்.
- 11. விண்ணில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் எண்ணிக்கை – 9 அவை: 1. செவ்வாய், 2. புதன், 3. வியாழன், 4. வெள்ளி, 5. சனி, 6. பூமி, 7. யுரேனஸ், 8. நெப்டியூன், 9. புளூட்டோ .
- 12. செந்தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்.
- 13. இ) மனித நேயம்
- 14. பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொற்களை இடைச்சொல் என்கிறோம். எ.கா. தம்பிக்கு – கு திருக்குறளை – ஐ
- 15. நிலத்தை அளக்கப் பயன்படும் சொற்கள் : சென்ட், ஏக்கர், ஹெக்டேர், ஏர்ஸ், மர, குழி, வேலி.
- 16. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.
- 17. கடல் பாட்டில் முழுநிலவு கண்ணாடியாகவும், பெருவானம் தலைவனாகவும் குறிப்பிடப்படுகின்றன.
- 18. (i) பாம்பு கடித்தல் : பாம்பு கடிக்கப்பட்டவரை சமதரையில் படுக்க வைக்க வேண்டும். கடித்த இடத்தில் துணியைக் கட்டவும் விஷம் உடலில் ஏறாமல் இருக்கும். துணியைச் சுற்றும்போது மேலிருந்து கீழாகச் சுற்ற வேண்டும். (ii) மின்சாரம் தாக்கினால் : மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து அகற்ற வேண்டும். மின்சாரம் பாய்ந்தவரை அவசரப்பட்டுத் தொடக்கூடாது. (iii) குழந்தைகளுக்கு அடிப்பட்டால் செய்ய வேண்டியவை : பனிக்கட்டியை அடிப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். அடிப்பட்ட இடத்தில் அட்டையை இரு பக்கமும் வைத்துக் கட்ட வேண்டும்
- 19. க ல் லெடுத்து – ம ல் லெடுத்த ஊ ரா க்கி – பே ரா க்கி மா நி லத்தில் – நா னி லத்தை ஆ ழ – சூ ழு ம் மு க் குளித்தான் – எ க் களிப்பு ப ண் டங்கள் – க ண் டங்கள் அ ஞ் சானம் – அ ஞ் சுவதை
- 20. தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். இது தனித்து இயங்காது. (எ.கா) : அஃது, இஃது