Practice Question Papers · with Answers

Samacheer Kalvi Class 7 Tamil Practice Question Papers

Download free Samacheer Kalvi Class 7 Tamil practice question papers with full answer keys. These are original Brain Grain model papers — built from our verified question bank to the real exam blueprint (sections, marks and solutions) — perfect for board revision and model tests.

Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 1
Class: 7Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5

Fill in the blanks. (Answer all questions.)

1.எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ………………… அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ) வடசொல்[1]
2.‘ஞானச்சுடர்’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது …………………. அ) ஞான + சுடர் ஆ) ஞானச் + சுடர் இ) ஞானம் + சுடர் ஈ) ஞானி + சுடர்[1]
3.நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் …………. அ) குகை ஓவியம் ஆ) சுவர் ஓவியம் இ) கண்ணாடி ஓவியம் ஈ) கேலிச்சித்திரம்[1]
4.‘உயர்வடைவோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………… அ) உயர் + வடைவோம் ஆ) உயர் + அடைவோம் இ) உயர்வு + வடைவோம் ஈ) உயர்வு + அடைவோம்[1]
5.சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ………………. அ) ஐகாகரக்குறுக்கம் ஆ) ஔகாகரக்குறுக்கம் இ) மகரக்குறுக்கம் ஈ) ஆய்தக்குறுக்கம்[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24

Answer briefly. (Answer all questions.)

6.பிறருடன் பேசும் போது நீங்கள் பயன்படுத்தும் இன்சொற்களைத் தொகுத்துக் கூறுக.[2]
7.இயற்கைக்காட்சி குறித்து நான்கு வரிகளில் கவிதை எழுதுக.[2]
8.‘பெருங்கடல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) பெரு + கடல் ஆ) பெருமை + கடல் இ) பெரிய + கடல் ஈ) பெருங் + கடல்[2]
9.சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?[2]
10.உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்?[2]
11.தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?[2]
12.காக்கை ஏன் குயில் குஞ்சைப் போகச்சொன்னது?[2]
13.பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?[2]
14.இரட்டைக்கிளவி என்பது யாது ? சான்று தருக.[2]
15.அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.[2]
16.பண்டைக்காலப் போர்க்கருவிகள் சிலவற்றின் படம் வரைந்து அவற்றின் பெயர்களை எழுதுக.[2]
17.ஆழ்கடல் காட்சியொன்றைக் கற்பனையாகப் படம் வரைந்து வண்ணம் தீட்டுக.[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15

Answer in detail. (Answer all questions.)

18.ஊருணியையும் மரத்தையும் எடுத்துக்காட்டிக் குன்றக்குடி அடிகளார் கூறும் செய்திகள் யாவை?[5]
19.கிளைமொழிகள் எவ்வாறு உருவாகின்றன?[5]
20.இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் ஒப்பிடுக.[5]
🔑 Show Answer Key — Set 1
  1. 1. அ) இயற்சொல்
  2. 2. இ) ஞானம் + சுடர்
  3. 3. ஈ) கேலிச்சித்திரம்
  4. 4. ஈ) உயர்வு + அடைவோம்
  5. 5. ஆ) ஔகாகரக்குறுக்கம்
  6. 6. வாழ்க வளமுடன், வணக்கம், நலமா, அன்புடையவரே, சகோதரரே, நன்று, அருமை, இனிமை, பாராட்டு, வாழ்த்துகள், வெற்றி உமதே, முயற்சி திருவினையாக்கும் ஆகியன பிறருடன் பேசும் போது நான் பயன்படுத்தும் இன்சொற்கள்.
  7. 7. “பூமித் தாயே! பசுமை போர்த்தியவளே! நீலக் கடலாய் அலங்கரித்தவளே! கதிரவன் காட்சியில் …. பொன் தகடானவளே! உன்னரும் வளத்தால் இன்னுயிர்கள் வாழ்கின்றனவே!”
  8. 8. ஆ) பெருமை + கடல்
  9. 9. ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை முதல் – 1 1/2 மாத்திரை இடை – 1 மாத்திரை கடை – 1 மாத்திரை
  10. 10. நாற்றுப் பறிக்கும்போது உழவர்கள் வயல் வரப்பில் உள்ள நண்டுகளைப் பிடித்தனர்.
  11. 11. தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கமழும். சுவைமிகுந்த பழங்களும் தங்கம் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.
  12. 12. காக்கைக்குக் கூட்டில் உள்ளது காக்கைக் குஞ்சு அல்ல, குயில் குஞ்சு தான் என்று ஒருநாள் தெரியவந்தது. எனவே, இனி நாம் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி குயில் குஞ்சைப் போகச் சொன்னது.
  13. 13. பாஞ்சாலங்குறிச்சியில் ஒவ்வொரு வீடுகளிலும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும். வீடுகளெல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும். வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்ததாகவும் இருக்கும்.
  14. 14. இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் இரட்டைக்கிளவி ஆகும். சான்று : விறுவிறு, மளமள.
  15. 15. அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான்.
  16. 16. (refer textbook)
  17. 17. (refer textbook)
  18. 18. ஊருணி, தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு உரிமை உடையது, அதைத் தடுப்பார் யாருமில்லை. ஊருணித்தண்ணீர் எடுத்து அனுபவிக்கப்படுவது. பழுத்த பயன்மரத்தின் கனிகளை அனைவரும் எடுத்து அனுபவிக்கலாம். பயன்மரம் பழங்களைத் தருவது உரிமை எல்லைகளைக் கவனத்தில் கொண்டல்ல. மருந்துமரம் உதவி செய்தலில் தன்னை மறந்த நிலையிலான பயன்பாட்டு நிலை ஒன்றே காணப்பெறுகிறது. நோயுடையார் எல்லாரும் பயன்படுத்தலாம். ஒப்புரவை விளக்கப் பயன்படுத்தியுள்ள இந்த உவமைகள் இன்றும் பயன்படுத்தலாம்.
  19. 19. (i) ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். (ii) வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத்தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும். (iii) அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறையும் போது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அதுவே ‘கிளைமொழி’ என்பர். (iv) கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழி ஆகும்.
  20. 20. மொழியை ஆள்வோம் கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக. உண்மை வணக்கம். உண்மை என்னும் தலைப்பில் சில நிமிடங்கள் உங்கள் முன் பேசுகின்றேன். வாய்மையே வெல்லும் என்பது நம் நீதித் துறையின் அடிப்படைக் கொள்கை. உண்மையை மட்டுமே இந்த உலகம் ஏற்கும். உண்மை பேசுபவனுக்குத் தான் நாளை சொர்க்கம் கிடைக்கும். வள்ளுவர் கூட உண்மைக்கு என்றே வாய்மை என்ற அதிகாரத்தையே வகுத்துள்ளார்.பத்துக் குறளில் உண்மையை அழகாக வள்ளுவர் விளக்குவின்றார். உண்மை பேசி உயர்ந்தவன் மன்னன் அரிச்சந்திரன். உண்மை பேசி உலக உத்தமர் ஆனார் காந்தியடிகள். எனவே நாமும் உண்மை பேசுவோம்! வாழ்வில் உயர்வோம்! நன்றி. சொல்லக் கேட்டு எழுதுக. 1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. 2. குயில் குளிரில் நடுங்கியது , மழையில் ஒடுங்கியது, வெயிலில…
Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 2
Class: 7Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5

Fill in the blanks. (Answer all questions.)

1.தொல்காப்பியம் கடற்பயணத்தை ………………… வழக்கம் என்று கூறுகின்றது. அ) நன்னீர் ஆ) தண்ணீ ர் இ) முந்நீர் ஈ) கண்ணீ ர்[1]
2.ஒலியின் வரிவடிவம் …………… ஆகும். அ) பேச்சு ஆ) எழுத்து இ) குரல் ஈ) பாட்டு[1]
3.மக்கள் அனைவரும் ……………. ஒத்த இயல்புடையவர்கள். அ) பிறப்பால் ஆ) நிறத்தால் இ) குணத்தால் ஈ) பணத்தால்[1]
4.வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை ………………… செய்வர். அ) அறுவடை ஆ) உழவு இ) நடவு ஈ) விற்பனை[1]
5.‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………… அ) குரல் + யாகும் ஆ) குரல் + ஆகும் இ) குர + லாகும் ஈ) குர + ஆகும்[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24

Answer briefly. (Answer all questions.)

6.மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி – ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம்.[2]
7.இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் எவை எனக் கருதுகிறீர்கள்?[2]
8.நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் எத்தகைய மக்கள் நலப்பணியைச் செய்வீர்கள்?[2]
9.பாடப்பகுதியில் இடம் பெற்ற சொற்களில் பகுபதம் பகாப்பதம் ஆகியவற்றைத் தனித்தனியே தொகுக்க.[2]
10.குற்றியலுகர எண்ணுப்பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.[2]
11.கு, சு, டு, து, று ஆகிய குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக.[2]
12.கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களை க் கூறுக.[2]
13.குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?[2]
14.பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?[2]
15.கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?[2]
16.ஔகாரம் எப்போது முழுமையாக ஒலிக்கும்?[2]
17.சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் – மாவட்ட ஆட்சியர் பாராட்டு.[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15

Answer in detail. (Answer all questions.)

18.இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்வதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?[5]
19.பேச்சுமொழியை …………………… என்றும் கூறுவர் அ) இலக்கிய ஆ) உலக இ) நூல் ஈ) மொழி[5]
20.காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறக் காரணம் என்ன?[5]
🔑 Show Answer Key — Set 2
  1. 1. இ) முந்நீர்
  2. 2. ஆ) எழுத்து
  3. 3. அ) பிறப்பால்
  4. 4. அ) அறுவடை
  5. 5. ஆ) குரல் + ஆகும்
  6. 6. மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.
  7. 7. அன்பு, இன்சொல் பேசுதல், உண்மை பேசுதல், களவாமை, புறங்கூறாமை, எளிமை, சிக்கனம், மனஉறுதி, கோபம் கொள்ளாமை, நேர்மை ஆகியன இளம் வயதிலேயே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்பண்புகளாகக் கருதுகின்றேன்.
  8. 8. தமிழை உலகமொழி ஆக்குவேன். ஏழ்மை நிலையை ஒழித்து, அனைத்தும் அனைவருக்கும் என்பதை நடைமுறைக்குக் கொண்டு வருவேன். சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை நீக்குவேன். இந்திய நதிகளை இணைப்பேன். ஆகியவற்றை நான் தலைவராக இருந்தால், மக்களுக்குச் செய்வேன்.
  9. 9. (refer textbook)
  10. 10. வன்தொடர் குற்றியலுகரம் – மூன்று, எட்டு, பத்து மென் தொடர் குற்றியலுகரம் – ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து, ஒன்பது உயிர்த் தொடர் குற்றியலுகரம் – ஆறு
  11. 11. பாகு, வாகு, பாடு, சாடு, ஓடு, விடு, காசு, வீசு, பேசு, வாது, கேது, சாது, மாது, வறு, சேறு, செறு, வது,வடு, பொது.
  12. 12. எரா பருமல் வங்கு கூம்பு பாய்மரம் சுக்கான் நங்கூரம் – போன்றவை கப்பல் உறுப்புகள் ஆகும்.
  13. 13. குகை ஓவியங்களில் இருந்து செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக குகைகளில் ஓவியம் வரைந்ததையும் பழந்தமிழர் வாழ்க்கை முறைகளையும் அறியலாம்.
  14. 14. பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.
  15. 15. கலங்கரை விளக்கில் இரவுநேரத்தில் விளக்கு ஏற்றப்படும்.
  16. 16. ஔ, வௌ என ஔவைகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தன்னுடைய இரண்டு மாத்திரையில் முழுமையாக ஒலிக்கும்.
  17. 17. சாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.
  18. 18. (i) இலக்கியங்கள் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பர். இலக்கியங்கள் தாம் தோன்றிய காலச் சூழலைக் காட்டுவதாலும் பண்பாடு, நாகரிகம், சமூக வாழ்க்கை ஆகியவற்றைக் காட்டுவதாலும் அவை அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. (ii) வாழ்வோடு இணைந்த சுவை கொண்டு இலக்கியங்கள் படைக்கப்படுவதாலும் நீதிநெறிகளை முன்வைப்பதாலும் இன்றும் இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதாலும் இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்கின்றன.
  19. 19. ஆ) உலக சரியா தவறா என எழுதுக. 1. மொழி காலத்திற்கேற்ப மாறுகிறது. 2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது. 3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி. 4. எழுத்துமொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம். 5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத் தாழ்வு அவசியம். 1. சரி 2. சரி 3. சரி 4. தவறு 5. சரி ஊடகங்களை வகைப்படுத்துக. வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்
  20. 20. (i) பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அஃறிணை உயிர்களுக்குத் தேவையான உறையுள் (தங்குமிடம்) – உணவு ஆகியன காட்டில் இயற்கையாகவே உள்ளன. (ii) மரங்கள், செடி கொடிகள் ஆகியன பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிற்குத் தங்குமிடம் மற்றும் உணவை இயற்கை அன்னையே வழங்குவதால், காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறுகிறார்.
Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 3
Class: 7Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5

Fill in the blanks. (Answer all questions.)

1.‘எதிரொலித்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ………………… அ) எதிர் + ரொலித்தது ஆ) எதில் + ஒலித்தது இ) எதிர் + ஒலித்தது ஈ) எதி + ரொலித்தது[1]
2.உழவர் சேற்று வயலில் ……………… நடுவர். அ) செடி ஆ) பயிர் இ) மரம் ஈ) நாற்று[1]
3.செல்வத்தின் பயன் ……………….. வாழ்வு. அ) ஆடம்பர ஆ) நீண்ட இ) ஒப்புரவு ஈ) நோயற்ற[1]
4.தமிழின் கிளைமொழிகளில் ஒன்று ………………… அ) உருது ஆ) இந்தி இ) தெலுங்கு ஈ) ஆங்கிலம்[1]
5.வானில் ……………….._கூட்டம் திரண்டால் மழை பொழியும் அ) அகில் ஆ) முகில் இ) துகில் ஈ) துயில்[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24

Answer briefly. (Answer all questions.)

6.வளர்தல், பேசுதல் – இவை எவ்வகைப் பெயர்கள்? விளக்கம் தருக.[2]
7.சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக.[2]
8.தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?[2]
9.மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.[2]
10.பேசும் ஓவியங்கள் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள தொழில் பெயர்களைக் கண்டறிந்து தொகுக்க.[2]
11.ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப்பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள், அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்தெழுதுங்கள்.[2]
12.உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக ஐந்து தொடர்கள் எழுதுக.[2]
13.அன்றாடப் பேச்சு வழக்கில் இடம்பெறும் அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றைத் தொகுக்க.[2]
14.மகரக்குறுக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.[2]
15.உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் அ) காற்று ஆ) வானம் இ) கடல் ஈ) மலை[2]
16.நீங்கள் எவற்றைக் குதிரையோடு ஒப்பிடுவீர்கள்?[2]
17.பனை மரம் தரும உணவுப் பொருள்கள் யாவை?[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15

Answer in detail. (Answer all questions.)

18.தீ விபத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?[5]
19.இரு பொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின் இரு பொருள்களையும் எழுதுக. (எ.கா) மாலை – மலர் மாலை, அந்திப்பொழுது.[5]
20.பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற் பெயர் எது? அ) ஊறு ஆ) நடு இ) விழு ஈ) எழுதல்[5]
🔑 Show Answer Key — Set 3
  1. 1. இ) எதிர் + ஒலித்தது
  2. 2. ஈ) நாற்று
  3. 3. இ) ஒப்புரவு
  4. 4. இ) தெலுங்கு
  5. 5. ஆ) முகில்
  6. 6. வளர்தல், பேசுதல் – இவை விகுதி பெற்ற தொழிற் பெயர்கள். ‘தல்’ என்ற தொழிற்பெயர் விகுதி பெற்று வருவதால் இஃது விகுதி பெற்ற தொழிற் பெயர்கள் ஆயிற்று.
  7. 7. சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள் : தோணி ஓடம் படகு பணை மிதவை தெப்பம் கடல்களைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள் : கலம் வங்கம் நாவாய்
  8. 8. பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி ஆகியவை தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் ஆகும்.
  9. 9. புள்ளிமான் சருகுமான் மிளாமான் வெளிமான்
  10. 10. பேசும் ஓவியங்கள் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள தொழில் பெயர்கள்: வேட்டைக்குச் செல்லுதல், நடனம் ஆடுதல், போர் செய்தல்.
  11. 11. எண்ணுப்பெயர்கள் : ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. குற்றியலுகரச் சொற்கள் : ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது, பத்து.
  12. 12. பலாமரம் நெடுநெடுனு வளர்ந்த மரம், நேர்த்தியான பலாமரம் முக்கனியில் இராண்டாம் கனி தரு மரம் பெரும்பழம் சுமந்ததால் உன்மேனி இளைத்ததோ? பழுமரத்தை நாடி பரவசமாய் பறவை வரும் கொடுக்க குறையாத அமுதசுரபி மரம் பலாமரம்
  13. 13. (refer textbook)
  14. 14. 1. வலம் வந்தான் 2. போன்ம் மொழியை ஆழ்வோம் கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.
  15. 15. இ) கடல்
  16. 16. நான் குதிரையையும் ஆற்றையும் ஒப்பிடுவேன். குதிரை மற்றும் ஆறு ஆகிய இரண்டும் ஓடும், சுழி இருக்கும். தாக்கும்.
  17. 17. பதனி, நுங்கு,
  18. 18. வீடு மற்றும் பொது இடங்களில் தீ பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டு, எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். தரமான மின் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்.சமையல் செய்யும் போது இருக்கமான உடைகளை அணிய வேண்டும். பட்டாசுகளைப் பாதுகாப்பான இடங்களில், பெரியவர் பாதுகாப்புடன் வெடிக்க வேண்டும். பணியாளார்களுக்குத் தீத்தடுப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும்.
  19. 19. ஆறு – எண் , நதி அன்னம் – சோறு, பறவை மதி – அறிவு, நிலவு நகை – புன்னகை, அணிகலன் மெய் – உடல், உண்மை திங்கள் – மாதம், நிலவு மாடு – விலங்கு, செல்வம் தை – மாதம், தைத்தல் பார் – உலகம், பார்த்ல் திரை – கடல் அலை, திரைச்சீலை படி – படித்தல், படிக்கட்டு இசை – புகழ், சங்கீதம் வேங்கை – மரம், விலங்கு கிளை – மரக்கிளை, உறவு மா – மாமரம், பெரிய மறை – மறைத்தல், வேதம்
  20. 20. ஆ) நடு பொருத்துக. 1. ஒட்டகம் – முதனிலைத் தொழிற்பெயர் 2. பிடி – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் 3. சூடு – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் 1. ஒட்டகம் – விகுதி பெற்ற தொழிற்பெயர் 2. பிடி – முதனிலைத் தொழிற்பெயர் 3. சூடு – விகுதி பெற்ற தொழிற்பெயர்

📄 About official papers

Class 7 does not have a public board examination, so there are no official board question papers for this class. The papers above are Brain Grain practice papers built to the standard exam pattern — ideal for unit tests, monthly tests and revision.

Practise more — your way

Every paper above is generated from the same 23,000+ verified Brain Grain question bank.