Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 1
Class: 8Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5
Fill in the blanks. (Answer all questions.)
1.பிறிதுமொழிதல் அணியில் ………….. மட்டும் இடம்பெறும். அ) உவமை ஆ) உவமேயம் இ) தொடை ஈ) சந்தம்[1]
2.‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….. அ) பாட் + அறிந்து ஆ) பா + அறிந்து இ) பாடு + அறிந்து ஈ) பாட்டு + அறிந்து[1]
3.அரசரை அவரது …………………….. காப்பாற்றும். அ) செங்கோல் ஆ) வெண்கொற்றக்குடை இ) குற்றமற்ற ஆட்சி ஈ) படை வலிமை[1]
4.‘விழித்தெழும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….. அ) விழி + எழும் ஆ) விழித்து + எழும் இ) விழி + தெழும் ஈ) விழித் + தெழும்[1]
5.ஆண்மையின் கூர்மை …………….. அ) வறியவருக்கு உதவுதல் ஆ) பகைவருக்கு உதவுதல் இ) நண்பனுக்கு உதவுதல் ஈ) உறவினருக்கு உதவுதல்[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24
Answer briefly. (Answer all questions.)
6.கைவினைக் கலைகளின் சிறப்புகள் குறித்த ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ்க.[2]
7.புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு?[2]
8.மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?[2]
9.எந்த நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி மாபெரும் புத்தகக் கா நடத்தப்படுகிறது?[2]
10.இசைக்கருவிகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.[2]
11.தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் …………………. அ) பாரதிதாசன் ஆ) தந்தை பெரியார் இ) வ.உ.சிதம்பரனார் ஈ) பெருஞ்சித்திரனார்[2]
12.மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்யவேண்டியது யாது?[2]
13.சுகாதாரம் பற்றிய பழமொழிகளைத் தொகுத்து எழுதுக. (எ.கா) சுத்தம் சோறு போடும்.[2]
14.‘தமிழ்மொழி வாழ்த்து’ – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.[2]
15.ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?[2]
16.‘வரைந்து’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக. (எ.கா.) வரைந்து வந்தான். வரைந்து முடித்தான்.[2]
17.மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15
Answer in detail. (Answer all questions.)
18.வல்லினம் மிகாத் தொடர்கள் ஐந்தனை எழுதுக.[5]
19.திருக்குறளில் அணிகள் இடம்பெற்றுள்ள குறட்பாக்களுள் ஐந்தனைக் கண்டறிந்து[5]
20.தேவாரம் பாடிய மூவர் பற்றிய செய்திகளைத் திரட்டுக.[5]
🔑 Show Answer Key — Set 1
- 1. அ) உவமை
- 2. இ) பாடு + அறிந்து
- 3. இ) குற்றமற்ற ஆட்சி
- 4. ஆ) விழித்து + எழும்
- 5. ஆ) பகைவருக்கு உதவுதல்
- 6. மாணவர்கள் தாங்களாகவே கைவினைக் கலைகளின் சிறப்புகள் குறித்த ஒலிப்பதிவைக் கேட்டு மகிழ வேண்டும்.கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக.
- 7. நுழைவுக் கட்டணம் இல்லை . அனுமதி இலவசம்.
- 8. இறைவனின் திருவடிகளின் மேல் பற்று வைக்காமல், பணத்தின் மீது ஆசை வைப்பது மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைகிறது.
- 9. உலகப் புத்தக நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
- 10. குடமுழாஉடுக்கைமத்தளம்வீணை
- 11. ஆ) தந்தை பெரியார் கோடிட்ட இடத்தை நிரப்புக 1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் …………… என அழைக்கப்பட்டன. 2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ………….. 1. கண்ணெழுத்துகள்) 2. வீரமாமுனிவர்)
- 12. உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின், “மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர், “உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே” என்ற இக்கருத்துகளை மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதைவிட வேறு நல்வழி இல்லை என்று நினைத்து ஈடேற வேண்டும்.
- 13. (i) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். (ii) சுத்தம் சுகம் தரும்; சுகாதாரம் நாட்டைக் காக்கும். (iii) கூழானாலும் குளித்துக்குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
- 14. இப்பாடலை இசையுடன் பாடி பழக வேண்டும்.
- 15. மொழியை ஆள்வோம் கேட்க :
- 16. (i) வரைந்து பார்த்தான். (ii) வரைந்து வைத்தான். (iii) வரைந்து கொடுத்தான். (iv) வரைந்து வியந்தான். (v) வரைந்து மகிழ்ந்தான். (vi) வரைந்து கற்றான். (vii) வரைந்து தெளிந்தான்.
- 17. மரக்கட்டில் = மரம் + கட்டில் நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்து மர + கட்டில் என்றானது. தோன்றல் விகாரத்தின் படி ‘க்’ தோன்றி மரக்கட்டில் என்றானது. மொழியை ஆள்வோம் கேட்க
- 18. வல்லினம் மிகாத் தொடர்கள் : (i) எழுவாய்த் தொடர் – தம்பி படித்தான் (ii) பெயரெச்சம் – எழுதிய பாடல் (iii) எதிர்மறைப் பெயரெச்சம் – எழுதாத பாடல் (iv) வினைத் தொகை – சுடுசோறு (v) உம்மைத் தொகை – தாய்தந்தைமொழியை ஆள்வோம் கேட்க
- 19. அவற்றில் இடம்பெற்றுள்ள அணிகளின் பெயர்களை எழுதுக. (i) பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். அணி : எடுத்துக்காட்டு உவமையணி (ii) தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான் அணி : வஞ்சப்புகழ்ச்சி அணி (iii) இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. அணி : சொற்பொருள் பின்வருநிலை அணி (iv) பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம் தீமை யால்திரிந்து அற்று. அணி : உவமையணி. (v) கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. அணி : பிறிதுமொழிதல் அணி
- 20. திருஞானசம்பந்தர் : இயற்பெயர் – ஆளுடைய பிள்ளை பெற்றோர் – சிவபாத இருதயர், பகவதி அம்மையார். ஊர் – சீர்காழி தேவாரத்தின் முதல் நூலைப் பாடியவர். பன்னிரு திருமுறைகளில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் திருமுறை இவர் பாடியவை. சிறு வயதில் மூன்று வயதுவரை பேசாதிருந்தார். உமையம்மை கொடுத்த ஞானப்பாலை உண்ணும்போது தோடுடைய செவியன் எனும் முதல் பாடலைப் பாடினார். திருநாவுக்கரசர் : இயற்பெயர் – மருள்நீக்கியார் சிறப்புப் பெயர்கள் – திருநாவுக்கரசர், வாகீசர், அப்பர், ஆளுடைய அரசு, தாண்டக வேந்தர், தருமசேனர் பெற்றோர் – புகழனார், மாதினியார். தமக்கை – திலகவதியார் பிறந்த ஊர் – திருவாமூர் இவர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் 4, 5, 6 ஆம் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.சுந்தரர் : பிறந்த ஊர் – திருநாவலூர் பெற்றோர் – சடையனார், இசைஞானியார். இயற்பெயர் – நம்பியாரூரர் சிறப்புப் பெயர்கள் – வன்தொண்டர், தம்பிரான் தோழர். இவருடைய பாடல்கள் ஏழாம் திருமுறையாகப் பன்னிரு திருமுறைகளுள் வைக்கப் பட்டுள்ளன. பாடநூல் வினாக்கள்
Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 2
Class: 8Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5
Fill in the blanks. (Answer all questions.)
1.முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………. அ) முழவுதிர ஆ) முழவுதிரை இ) முழவதிர ஈ) முழவு அதிர[1]
2.‘சீவனில்லாமல் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………. அ) சீவ + நில்லாமல் ஆ) சீவன் + நில்லாமல் இ) சீவன் + இல்லாமல் ஈ) சீவ + இல்லாமல்[1]
3.கற்றவருக்கு அழகு தருவது ………………. அ) தங்கம் ஆ) வெள்ளி இ) வைரம் ஈ) கல்வி[1]
4.‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……….. அ) விழுந்த + அங்கே ஆ) விழுந்த + ஆங்கே இ) விழுந்தது + அங்கே ஈ) விழுந்தது + ஆங்கே[1]
5.விடும் என்பது ……………… சீர். அ) நேரசை ஆ) நிரையசை இ) மூவசை ஈ) நாலசை[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24
Answer briefly. (Answer all questions.)
6.திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் யாவை?[2]
7.நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?[2]
8.கண்டிப்பாக வழிவிட வேண்டிய வாகனங்கள் யாவை?[2]
9.ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக.[2]
10.அரசன் தண்டிக்கும் முறை யாது?[2]
11.மனிதர்கள் வளர்க்கவேண்டிய பண்புகளாகவும் விலக்க வேண்டிய பண்புகளாகவும் நீங்கள் கருதுவன யாவை?[2]
12.உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் நிகழ்வது யாது?[2]
13.நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?[2]
14.காலம் உடன் வரும் – கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.[2]
15.‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …. அ) வான + மளந்தது ஆ) வான் + அளந்தது இ) வானம் + அளந்தது ஈ) வான் + மளந்தது[2]
16.இயற்கை என்னும் தலைப்பில் அமைந்த புதுக்கவிதைகளின் ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ்க.[2]
17.பகத்சிங் கண்ட கனவு யாது?[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15
Answer in detail. (Answer all questions.)
18.‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி ………………….. அ) இயல்பு ஆ) தோன்றல் இ) திரிதல் ஈ) கெடுதல்[5]
19.குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………. அ) குணங்கள் எல்லாம் ஆ) குணமெல்லாம் இ) குணங்களில்லாம் ஈ) குணங்களெல்லாம்[5]
20.பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.[5]
🔑 Show Answer Key — Set 2
- 1. இ) முழவதிர
- 2. இ) சீவன் + இல்லாமல்
- 3. ஈ) கல்வி
- 4. ஈ) விழுந்தது + ஆங்கே
- 5. ஆ) நிரையசை
- 6. திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் : நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்.
- 7. நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு : செவ்விந்தியர்கள் நிலத்தைத் தாயாகக் கருதுகிறார்கள். தாய் சேய் உறவு.
- 8. தீயணைப்பு வாகனம், அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகிய வாகனங்களுக்குக் கண்டிப்பாக . வழிவிட வேண்டும்.
- 9. (i) நிலம் – பூமி, தரை, புவி (ii) நீர் – புனல், தண்ணீர் (iii) தீ – அனல், நெருப்பு, கனல் (iv) காற்று – வளி, கால் (v) வானம் – ஆகாயம், விண்
- 10. ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும். இதுவே அரசன் தண்டிக்கும் முறை ஆகும்.
- 11. (refer textbook)
- 12. உண்மை அறிவனை உணர்ந்தோர் உள்ளத்தில் இறைவன் இன்பப் பெருக்காய்க் கரைகடந்து பொங்கிடும் கடலாக விளங்குகின்றான்.
- 13. பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகள் : (i) நல்லறிவு (ii) நற்காட்சி (iii) நல்லொழுக்கம்.
- 14. மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
- 15. இ) வானம் + அளந்தது
- 16. மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை. கீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக
- 17. இந்தியா அந்நியரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே பகத்சிங் கண்ட கனவு ஆகும்.
- 18. அ) இயல்பு பொருத்துக 1. மட்பாண்டம் – தோன்றல் விகாரம் 2. மரவேர் – இயல்புப் புணர்ச்சி 3. மணிமுடி – கெடுதல் விகாரம் 4. கடைத்தெரு – திரிதல் விகாரம் 1. மட்பாண்டம் – திரிதல் விகாரம் 2. மரவேர் – கெடுதல் விகாரம் 3. மணிமுடி – இயல்புப் புணர்ச்சி 4. கடைத்தெரு – தோன்றல் விகாரம்
- 19. ஈ) குணங்களெல்லாம்பொருத்துக 1. நிறை – பொறுமை 2. பொறை – விருப்பம் 3. மதம் – மேன்மை 4. மையல் – கொள்கை 1. நிறை – மேன்மை 2. பொறை – பொறுமை 3. மதம் – கொள்கை 4. மையல் – விருப்பம்
- 20. (எ.கா) காகம் கரையும். (i) ஆந்தை : அலறும் (ii) கிளி : பேசும் (iii) குயில் : கூவும் (iv) புறா : குனுகும் (v) மயில் : அகவும் (vi) குருவி : கீச்சிடும் (vii) கோழி : கொக்கரிக்கும் (viii) சேவல் : கூவும் (ix) வண்டு : முரலும் (x) கூகை : குழறும்
Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 3
Class: 8Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5
Fill in the blanks. (Answer all questions.)
1.காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………. அ) காட்டை எரித்து ஆ) காட்டையெரித்து இ) காடுஎரித்து ஈ) காடுயெரித்து[1]
2.வெங்கரி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….. அ) வெம் + கரி ஆ) வெம்மை + கரி இ) வெண் + கரி ஈ) வெங் + கரி[1]
3.பசியால் வாடும் ……………. உணவளித்தல் நமது கடமை. அ) பிரிந்தவர்க்கு ஆ) அலந்தவர்க்கு இ) சிறந்தவர்க்கு ஈ) உயர்ந்தவருக்கு[1]
4.‘இன்பதுன்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………. அ) இன் துன்பு ஆ) இன்பம் + துன்பம் இ) இன்ப + அன்பம் ஈ) இன்ப + அன்பு[1]
5.ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் …………….. அ) பகர்ந்த னர் ஆ) நுகர்ந்த னர் இ) சிறந்தனர் ஈ) துறந்தனர்[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24
Answer briefly. (Answer all questions.)
6.வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?[2]
7.பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?[2]
8.பல்வகைத் தொழில்கள் என்னும் தலைப்பில் படத்தொகுப்பு உருவாக்குக.[2]
9.வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.[2]
10.‘ஆய்தம்’ – இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக.[2]
11.திராவிட மகாஜன சங்கம் எவற்றுக்காகப் போராடியது?[2]
12.கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?[2]
13.யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?[2]
14.பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?[2]
15.‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?[2]
16.இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது?[2]
17.சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15
Answer in detail. (Answer all questions.)
18.நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?[5]
19.குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார். நந்தீசுவரக்கண்ணி நூலை இயற்றியுள்ளார்.[5]
20.பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு பத்தியைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள வேற்றுமை உருபுகளை எடுத்து எழுதி வகைப்படுத்துக.[5]
🔑 Show Answer Key — Set 3
- 1. ஆ) காட்டையெரித்து
- 2. ஆ) வெம்மை + கரி
- 3. ஆ) அலந்தவர்க்கு
- 4. ஆ) இன்பம் + துன்பம்
- 5. அ) பகர்ந்த னர்
- 6. வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது: ‘என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனத்துடன் ஆதரிப்பேன்’ என்று அம்பேத்கர் கூறினார்.
- 7. பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் : (i) குழந்தைகளுக்கான கிலுகிலுப்பை (ii) பொம்மைகள் (iii) பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் சிறிய கொட்டான் (iv) பெரிய கூடை (v) சுளகு (vi) விசிறி (vii) தொப்பி (vii) ஓலைப்பாய்
- 8. மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
- 9. (refer textbook)
- 10. (refer textbook)
- 11. திராவிட மகாஜன சங்கம் சாலைகள் அமைத்தல், கால்வாய்கள் பராமரித்தல், குடிகளின் பாதுகாப்புக்குக் காவல்துறையினரை நியமித்தல், பொது மருத்துவமனைகள் அமைத்தல், சிற்றூர்கள் தோறும் கல்விக்கூடங்கள் ஏற்படுத்துதல் போன்றவற்றுக்காகப் போராடியது.
- 12. கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி : சித்தர்கள் வாழும் கொல்லிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.
- 13. பிறரை மன்னிக்கத் தெரிந்தவரின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது.
- 14. பகைவர்களிடம் நாம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
- 15. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல். காரணம் : இங்கு நெல், சோளம், தினை வகைகள், வாழைப்பழம், காய்கறிகள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது.
- 16. இவ்வுலகம் பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால்தான் இயங்குகிறது.
- 17. எதையும் நன்கு ஆராய்ந்து ஒரு பக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.
- 18. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை : தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, ஏழு மணி நேர தூக்கம், மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துதல் ஆகியன அவசியம். எங்கோ விளையும் ஆப்பிளைச் சாப்பிடுவதை விட, நமது ஊரில் விளையும் கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி, நெல்லி, வாழைப்பழங்கள் ஆகியவற்றைக் காலை உணவுக்கு முன் சாப்பிடலாம்.
- 19. குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். அறிந்து பயன்படுத்துவோம் பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக. விபத்தில்லா வாகனப் பயணம் சாலைவிதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து, வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம். ஓட்டுநர் வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும். சந்திப்புச் சாலைகள், பயணிகள் கடக்கும் இடங்கள், திரும்பும் இடங்கள் ஆகியவற்றை நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். அவ்விடங்களில் இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்று உறுதி செய்த பிறகே கடந்து செல்ல வேண்டும். சாலைச்சந்திப்பில் நுழையும் போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். தீயணைப்பு வாகனம், அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, அவை தடையின்றிச் செல்வதற்குக் கண்டிப்பாக வழிவிட வேண்டும். எல்லா ஓட்டுநர்களும் தேவையான இடங்களில் கை சைகை அல்லது வாகன எச்சரிக்கை விளக்குகளைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும். மலைச்சாலைகள், மிகவும் சரிவான சாலைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும். வினாக்கள்
- 20. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கல்வி எனப்படும். மனிதர்களது வாழ்வில் உடலோம்பலுடன் அறிவோம்பலும் நிகழ்ந்துவரல் வேண்டும். அறிவோம்பலுக்குக் கல்வி தேவை. அக்கல்விப்பயிற்சிக்கு உரிய பருவம் இளமை என்பதை விளக்க வேண்டியதில்லை. இது பற்றியே இளமையில் கல் என்னும் முதுமொழி பிறந்தது.