Practice Question Papers · with Answers

Samacheer Kalvi Class 8 Tamil Practice Question Papers

Download free Samacheer Kalvi Class 8 Tamil practice question papers with full answer keys. These are original Brain Grain model papers — built from our verified question bank to the real exam blueprint (sections, marks and solutions) — perfect for board revision and model tests.

Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 1
Class: 8Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5

Fill in the blanks. (Answer all questions.)

1.மனிதர்கள் தம் ……………. தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும். அ) ஐந்திணைகளை ஆ) அறுசுவைகளை இ) நாற்றிசைகளை ஈ) ஐம்பொறிகளை[1]
2.‘பாடறிந்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….. அ) பாட் + அறிந்து ஆ) பா + அறிந்து இ) பாடு + அறிந்து ஈ) பாட்டு + அறிந்து[1]
3.பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ………… அ) செல்க ஆ) ஓடு இ) வாழ்க ஈ) வாழிய[1]
4.‘விழித்தெழும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….. அ) விழி + எழும் ஆ) விழித்து + எழும் இ) விழி + தெழும் ஈ) விழித் + தெழும்[1]
5.‘நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………… அ) நம் + இல்லை ஆ) நமது + இல்லை இ) நமன் + நில்லை ஈ) நமன் + இல்லை[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24

Answer briefly. (Answer all questions.)

6.பானையை உடைத்தது கண்ணன் அல்ல.[2]
7.ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார்?[2]
8.மண்பாண்டம், சுடுமண் சிற்பம் – ஒப்பிடுக.[2]
9.உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.[2]
10.இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது?[2]
11.மழைச்சோறு எடுத்தபின் எவ்வாறு மழை பெய்தது?[2]
12.பனையோலையால், செய்யப்படும் பல்வேறு கைவினைப்பொருள்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.[2]
13.தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?[2]
14.‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?[2]
15.இயற்கைச் சீற்றங்கள் பற்றிய புகைப்படங்களை நாளேடுகளிலிருந்து திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.[2]
16.‘ஆய்தம்’ – இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக.[2]
17.அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமையாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15

Answer in detail. (Answer all questions.)

18.‘காலம் உடன் வரும்’ – கதையைச் சுருக்கி எழுதுக.[5]
19.உமது பகுதியில் நடைபெறும் ஏதேனும் ஒரு தொழிலின் பல செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.[5]
20.கல்வியே அழியாச் செல்வம்[5]
🔑 Show Answer Key — Set 1
  1. 1. ஈ) ஐம்பொறிகளை
  2. 2. இ) பாடு + அறிந்து
  3. 3. அ) செல்க
  4. 4. ஆ) விழித்து + எழும்
  5. 5. ஈ) நமன் + இல்லை
  6. 6. பானையை உடைத்தது கண்ணன் அல்லன்.
  7. 7. ஓடை எழுப்பும் ஒலிக்கு சிறந்த சொற்களைப் பேசும் பெண்கள் பாடும் வள்ளைப் பாட்டின் சிறப்புக்கேற்ப முழங்கும் முழவையொலியை உவமையாகக் கவிஞர் வாணிதாசன் கூறுகிறார்.
  8. 8. (refer textbook)
  9. 9. உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.
  10. 10. இவ்வுலகம் பண்பு உடைய சான்றோரின் வழியில் நடப்பதால்தான் இயங்குகிறது.
  11. 11. மழைச்சோறு எடுத்தபின் பேய்மழை பெய்தது. ஊசிபோல நிலத்தில் இறங்கி உலகம் முழுவதிலும் மழை பெய்தது. சிட்டுபோல் மின்னல் மின்னி உலகெங்கும் பொழிந்தது. உலகெங்கும் செல்ல மழை பெய்தது. .
  12. 12. (refer textbook)
  13. 13. தமிழ் புகழ் கொண்டு வாழுமிடம் : ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ் கொண்டு வாழ்கிறது.
  14. 14. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல். காரணம் : இங்கு நெல், சோளம், தினை வகைகள், வாழைப்பழம், காய்கறிகள் போன்றவை விளைவிக்கப்படுகின்றன. மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது.
  15. 15. (refer textbook)
  16. 16. (refer textbook)
  17. 17. அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகள் : அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் செரிமானம் ஆகாது. அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழும் நிலைக்கு ஆளாவோம்.
  18. 18. முன்னுரை : துணிகளை நெய்து துறைமுகத்தில் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அனந்திகா நிறுவனம் சிக்கிக் கொண்டது. இச்சிக்கலை சுப்பிரமணி எவ்வாறு தீர்த்து வைத்தான் என்பதனையும் அதற்கு உதவிய நெசவுத் தொழிலாளரின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதையைப் பார்க்கலாம். சுப்பிரமணியனின் கவலை : தறியில் பாவு தீர்ந்துவிட்டால், அடுத்த பாவு பிணைக்க ஆளில்லை. ரங்கன் என்பவர் ஊரில் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் சுப்பிரமணி நண்பன் ரகுவைப் பார்க்கச் சென்றார். அவருடைய தறியில் வேலை செய்கிறவர்களை உதவிக்கு அனுப்புமாறு கேட்டார். அங்கும் ஆள் இல்லை என அறிந்ததும் கவலை அதிகமானது. ரகுவின் ஆலோசனை : சுப்பிரமணியின் கவலையை உணர்ந்த ரகு, மாயழகு என்பவரைப் போய்ப் பார்த்து, அவரது மனைவியை அழைத்துப் போகச் சொன்னார். இரவு நேரத்தில் செல்வ…
  19. 19. நெசவுத்தொழிலின் பல செயல்கள் : (i) சாயம் போடுதல். (ii) பாவு சரி செய்தல். (iii) இழைச் சிக்கெடுத்தல். (iv) கஞ்சி போடுதல். (v) மழைக்காலமாயின் அனல் காட்டுதல். (vi) தறியேற்றுதல். (vii) சரிகை வடிவமைப்புச் செய்தல். (viii) நெய்தல். (ix) மடித்தல்.
  20. 20. அனைவருக்கும் வணக்கம்! நான் கல்வியே அழியாச் செல்வம் என்ற தலைப்பில் பேசவிருக்கிறேன். கல்வி இன்றைய மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அத்தகைய கல்வியைக் கற்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமம் என்ற நிலையில் உள்ளது. கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்று பாரதிதாசன் பெண்களின் கல்வி பற்றிக் கூறுகிறார். ‘கற்றவரைக் கண்ணுடையார்’ என்றும் கல்லாதவரை முகத்தில் இரண்டு புண்ணுடையவர்’ என்றும் இடித்துரைக்கிறார் வள்ளுவர். கற்றோர்க்கு அணிகலன் கல்வியே; கற்றோரே கண்ணுடையவர். ‘கற்றோரே தேவர் எனப் போற்றப்படத்தக்கவர்; கற்றோரே மேலானவர் என்பதை உணர வேண்டும்கல்வி கற்றவன் நல்ல ஆளுமையைப் பெறுகிறான். எல்லா நாட்டுக்கும் சொந்தக்காரன் ஆகிறான். எல்லா மக்களுக்கும் உறவினராகிறான். அறியாமை இருளைப் போக்கி தெளிவுபெறுகிறான். உலக…
Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 2
Class: 8Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5

Fill in the blanks. (Answer all questions.)

1.‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………. அ) கண் + ஓடாது ஆ) கண் + ணோடாது இ) க + ஓடாது ஈ) கண்ணோ + ஆடாது[1]
2.‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………… அ) மட்டு + மல்ல ஆ) மட்டம் + அல்ல இ) மட்டு + அல்ல ஈ) மட்டும் + அல்ல[1]
3.போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………….. அ) போன்றன ஆ) போலன்றன இ) போலுடன்றன ஈ) போல் உடன்றன[1]
4.செவ்விந்தியர்கள் நிலத்தைத் ………………….. மதிக்கின்ற னர். அ) தாயாக ஆ) தந்தையாக இ) தெய்வமாக ஈ) தூய்மையாக[1]
5.‘இவையுண்டார்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………. அ) இ + யுண்டார் ஆ) இவ் + உண்டார் இ) இவை + உண்டார் ஈ) இவை + யுண்டார்[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24

Answer briefly. (Answer all questions.)

6.மனிதர்களிடம் உள்ள பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவனவற்றுள் நற்பண்புகள் யாவை?[2]
7.இரட்டுறமொழிதல் அணி எவ்வாறு பொருள் தரும்?[2]
8.கவலைகளைக் கவிஞர் எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?[2]
9.திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது[2]
10.மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்யவேண்டியது யாது?[2]
11.திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.[2]
12.விபத்துகளை எவ்வாறு தவிர்க்கலாம்?[2]
13.‘தன் சுத்தம்’ என்னும் தலைப்பில் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.[2]
14.யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?[2]
15.இரவுபகல் என்பது எவ்வகைத் தொடர் என விளக்குக.[2]
16.இசைக்கருவிகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.[2]
17.நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15

Answer in detail. (Answer all questions.)

18.‘மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ……………….. பொருளைக் குறிக்கிறது. அ) ஆக்கல் ஆ) அழித்தல் இ) கொடை ஈ) அடைதல்[5]
19.தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.[5]
20.தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.[5]
🔑 Show Answer Key — Set 2
  1. 1. அ) கண் + ஓடாது
  2. 2. ஈ) மட்டும் + அல்ல
  3. 3. இ) போலுடன்றன
  4. 4. அ) தாயாக
  5. 5. இ) இவை + உண்டார்
  6. 6. நற்பண்புகள் : அறிவு, கருணை, அன்பு, இரக்கம், நாணம், மேன்மை , எளிமை, நினைவு, துணிவு, இன்பம், பொறுமை, கொள்கையைப் பின்பற்றுதல், மானம், அறம், மகிழ்ச்சி, ஊக்கம், விருப்பம், வெற்றி, இளமை, ஆராய்ந்து தெளிதல்.
  7. 7. இரட்டுறமொழிதல் அணியில் ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமையும். மொழியை ஆள்வோம் கேட்க
  8. 8. கவலைகளைக் கவிஞர் கைக்குழந்தைகளோடு உருவகப் படுத்துகிறார்.
  9. 9. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.
  10. 10. உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின், “மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர், “உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே” என்ற இக்கருத்துகளை மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதைவிட வேறு நல்வழி இல்லை என்று நினைத்து ஈடேற வேண்டும்.
  11. 11. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.
  12. 12. சாலைவிதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
  13. 13. மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
  14. 14. கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அவருக்கு அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் தேவையில்லை.
  15. 15. (i) இரவுபகல் – உம்மைத்தொகை (ii) இத்தொடர் இரவும் பகலும் என விரிந்து பொருள் தருகின்றது. (iii) இதில் சொற்களின் இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதால் உம்மைத்தொகை ஆயிற்று.
  16. 16. குடமுழாஉடுக்கைமத்தளம்வீணை
  17. 17. நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு : செவ்விந்தியர்கள் நிலத்தைத் தாயாகக் கருதுகிறார்கள். தாய் சேய் உறவு.
  18. 18. அ) ஆக்கல் பொருத்துக 1. மூன்றாம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன். 2. நான்காம் வேற்றுமை – பாரியினது தேர். 3. ஐந்தாம் வேற்றுமை – மண்ணால் குதிரை செய்தான். 4. ஆறாம் வேற்றுமை – ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன். 1. மூன்றாம் வேற்றுமை – மண்ணால் குதிரை செய்தான். 2. நான்காம் வேற்றுமை – இராமனுக்குத் தம்பி இலக்குவன். 3. ஐந்தாம் வேற்றுமை – ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன். 4. ஆறாம் வேற்றுமை – பாரியினது தேர்
  19. 19. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றம் : (i) தமிழ் எழுத்துகளில் நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் ரு பயன்படுகின்றது. (ii) ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக் கொம்புடை பயன்படுகின்றது. (iii) ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால்ள பயன்படுகின்றது. (iv) குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்து விட்டது.
  20. 20. முன்னுரை : தாய்மொழி, தாய்நாடு மீது அனைவருக்கும் பற்று இருக்கும். அதன்படி செவ்விந்தியர்கள் தாய்மண் மீது வைத்துள்ள பற்றினைப் பற்றிய சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவரான சியாட்டல் கூறுவதைப் பார்ப்போம். ஒரே குடும்பம் : காற்றின் தூய்மையும் நீரின் உயர்வும் அனைவருக்கும் பொதுவானவை. இப்பூமியில் உள்ள ஒவ்வொரு ஊசியிலையும் அனைத்துக் கடற்கரைகளும் கருமரங்களில் தவழும் பனித்துளிகளும் இன்னிசை எழுப்பும் பூச்சி வகைகளும் இவர்களுக்குப் புனிதமானவை. இந்தப் பூமி. எமது மக்களுக்குத் தாயாகும். இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள், மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள். மலைமுகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல் சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும் இங்க…
Brain Grain · braingrain.in
Tamil — Practice Paper · Set 3
Class: 8Samacheer KalviMax Marks: 44
Name: ____________________Reg No: ____________
Part I — Fill in the Blanks 5 × 1 = 5

Fill in the blanks. (Answer all questions.)

1.‘ஊராண்மை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………. அ) ஊர் + ஆண்மை ஆ) ஊராண் + மை இ) ஊ + ஆண்மை ஈ) ஊரு + ஆண்மை[1]
2.மறைபொருளைக் காத்தல் …………….. எனப்படும். அ) சிறை ஆ) அறை இ) கறை ஈ) நிறை[1]
3.‘வருமுன்னர்’ – எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ………………. அ) எடுத்துக்காட்டு உவமை அணி ஆ) தற்குறிப்பேற்ற அணி இ) உவமை அணி ஈ) உருவக அணி[1]
4.அயோத்திதாசர் …………….. சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். அ) தமிழக ஆ) இந்திய இ) தென்னிந்திய ஈ) ஆசிய[1]
5.சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் ………………. தகுதி அறிந்து பேச வேண்டும். அ) சொல்லின் ஆ) அவையின் இ) பொருளின் ஈ) பாடலின்[1]
Part II — Short Answer Questions 12 × 2 = 24

Answer briefly. (Answer all questions.)

6.பின்வரும் நாலடியார் பாடலைப் படித்துச் சுவைக்க.[2]
7.யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?[2]
8.‘தன்னம்பிக்கை’ என்னும் தலைப்பில் கவிதை ஒன்றை எழுதி வகுப்பில் பகிர்க.[2]
9.பிறர் துன்பம் கண்டு வருந்தி அவர்களுக்குத் தொண்டு செய்த சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.[2]
10.‘வரைந்து’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி வெவ்வேறு தொடர்களை எழுதுக. (எ.கா.) வரைந்து வந்தான். வரைந்து முடித்தான்.[2]
11.ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?[2]
12.நண்பர்களின் இயல்பை அளந்து காட்டும் அளவுகோல் எது?[2]
13.எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?[2]
14.திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் யாவை?[2]
15.முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித் தொடராக மாற்றுக.)[2]
16.ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?[2]
17.கண்டிப்பாக வழிவிட வேண்டிய வாகனங்கள் யாவை?[2]
Part III — Long Answer Questions 3 × 5 = 15

Answer in detail. (Answer all questions.)

18.கிணற்றுத் தவளை போல[5]
19.மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?[5]
20.எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.[5]
🔑 Show Answer Key — Set 3
  1. 1. அ) ஊர் + ஆண்மை
  2. 2. ஈ) நிறை
  3. 3. இ) உவமை அணி
  4. 4. இ) தென்னிந்திய
  5. 5. ஆ) அவையின்
  6. 6. கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல – தெள்ளிதின் ஆராய்ந்தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து.
  7. 7. மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை .
  8. 8. தன்னம்பிக்கை : மனிதனின் வெற்றிக்கு மூலதனம் தன்னம்பிக்கை தன்னம்பிக்கை இல்லையேல் தடம்புரள்வான் மனிதனே! மூடனையும் அறிவாளியாக்கி முன்னேறச் செய்யும். கோழையையும் வீரனாக்கி கோபுரத்தில் அமர்த்தும்.
  9. 9. 1. வள்ளலார் 2. புத்தர் 3. விவேகானந்தர் 4. அன்னை தெரசா 5. திரு.வி.க. 6. பண்டித ரமாபாய் 7. நாராயண குரு 8. ரமணமகரிஷி 9. குருநானக்
  10. 10. (i) வரைந்து பார்த்தான். (ii) வரைந்து வைத்தான். (iii) வரைந்து கொடுத்தான். (iv) வரைந்து வியந்தான். (v) வரைந்து மகிழ்ந்தான். (vi) வரைந்து கற்றான். (vii) வரைந்து தெளிந்தான்.
  11. 11. மொழியை ஆள்வோம் கேட்க :
  12. 12. நமக்கு வரும் துன்பமே நமது நண்பர்களின் உண்மையான இயல்பை அளந்து காட்டும் அளவுகோலாகும்.
  13. 13. (i) பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். (ii) இது பெயரெச்சம் , வினையெச்சம் என்று இருவகைப்படும். (எ.கா.) படித்த மாணவன். படித்த பள்ளி.
  14. 14. திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் : நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்.
  15. 15. முகில்கள் திரண்டால் மழை பெய்யும்.
  16. 16. ஓடை கற்களில் உருண்டும், தவழ்ந்தும், நெளிந்தும், சலசல என்ற ஒலி எழுப்பியபடி ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்.
  17. 17. தீயணைப்பு வாகனம், அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகிய வாகனங்களுக்குக் கண்டிப்பாக . வழிவிட வேண்டும்.
  18. 18. கந்தன் கிணற்றுத் தவளை போல நாட்டு நடப்புகளை அறியாமல் இருந்தான். கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் முன்னுரை – நோய் வரக் காரணங்கள் – நோய் தீர்க்கும் வழிமுறைகள் – வருமுன் காத்தல் – உணவும் மருந்தும் – உடற்பயிற்சியின் தேவை – முடிவுரை முன்னுரை : நம்மிடம் என்னதான் கல்வி, செல்வம் முதலியவை இருந்தாலும் உடல் நலத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ்வது முக்கியமாகும். உடல் நலத்துடன் கூடிய வாழ்வு பல கோடி மதிப்புடைய சொத்துக்குச் சமமானதாகும். அவ்விதம் நோயற்ற வாழ்வினை வாழ நாம் செய்ய வேண்டியனவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். நோய் வரக் காரணங்கள் : இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வின்மை, காலம் தவறிய உணவு. உணவுப் பழக்கவழக்க மாற்றம் உள்ளிட்டவையே பல்வேறு உடல்நல பாதிப்புகள…
  19. 19. மெய் எழுத்துகளின் இடப்பிறப்பு : (i) வல்லின மெய்கள் க் ச்ட்த்ப்ற் ) – மார்பு (ii) மெல்லின மெய்கள் (ங் ஞ் ண் ந்ம்ன் ) – மூக்கு (iii) இடையின மெய்கள் (யார் ல் வ் ழ் ள்) – கழுத்து
  20. 20. முன்னுரை : மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான். பிறகு ஒலிகள் மூலம் வெளிப்படுத்தினான். அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக் கொண்டான். காலப் போக்கில் அவை பேச்சு மொழியாக உருவானது. வரிவடிவத்தின் தொடக்க நிலை : மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும் பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலையாகும். ஓவிய எழுத்து : தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை ஓவிய எழுத்து என்பர். ஒ…

📄 About official papers

Class 8 does not have a public board examination, so there are no official board question papers for this class. The papers above are Brain Grain practice papers built to the standard exam pattern — ideal for unit tests, monthly tests and revision.

Practise more — your way

Every paper above is generated from the same 23,000+ verified Brain Grain question bank.