சிற்றிலக்கிய வகைகளின் பெயர்கள் : சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைப்படும். அவற்றுள் எனக்குத் தெரிந்தவை.
1. உலா
2. ஊசல்
3. ஒருபா ஒருபது
4. குறவஞ்சி
5. சதகம்
6. தாண்டகம்
7. தூது
8. நவமணிமாலை
9. நான்மணிமாலை
10. பதிகம்
11. அந்தாதி
12. பரணி
13. கலம்பகம்
14. பள்ளு
15. குறம்
சிற்றிலக்கிய வகைகளின் பெயர்கள் : சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைப்படும். அவற்றுள் எனக்குத் தெரிந்தவை.
1. உலா
2. ஊசல்
3. ஒருபா ஒருபது
4. குறவஞ்சி
5. சதகம்
6. தாண்டகம்
7. தூது
8. நவமணிமாலை
9. நான்மணிமாலை
10. பதிகம்
11. அந்தாதி
12. பரணி
13. கலம்பகம்
14. பள்ளு
15. குறம்
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.




சமூக நலன் சார்ந்த பாடல்கள் :
1. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம். – கண்ணதாசன்
2. கொடுத்த தெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான். – வாலி
3. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்ப அயல் நாட்டில்
4. “போர் படைதனில் தூங்கியவன்
வெற்றி இழந்தான்.
உயர் பள்ளியில் தூங்கியவன்
கல்வி இழந்தான்.
கடைதனில் தூங்கியவன்
முதல் இழந்தான்.
கொண்ட கடமையில் தூங்கியவன்
புகழ் இழந்தான்.”
– பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்
5. “உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்” – புலமைப்பித்தன்
6. நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இந்த ஏழைகள் வேதனை படமாட்டார் .
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீ ர் கடலிலே விழமாட்டார்.
தெரிந்து தெளிவோம்
(i) கேரளாவைச் சேர்ந்தவர்களாகிய எம்.ஜி.ஆரின் பெற்றோர் குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். இலங்கையில் உள்ள கண்டியில் கி.பி.(பொ.ஆ.) 1917 சனவரித் திங்கள் பதினேழாம் நாள் கோபாலன் – சத்துயபாமா இணையருக்கு ஐந்தாம் மகனாக எம்.ஜி.ஆர். பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் தாயார் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து, கும்பகோணத்தில் குடியேறினார்.
(ii) சென்னைப் பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது. தமிழக அரசு அவர் நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது; சென்னைக் கடற்கரையில் இவருக்கு எழிலார்ந்த நினைவிடம் ஒன்றையும் அமைத்துள்ளது. அவரது இறப்புக்குப்பின் இந்திய அரசு, மிக உயரிய பாரத ரத்னா (இந்திய மாமணி) விருதினை 1988ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.
(iii) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஒட்டி (2017-2018) தமிழக அரசால் சென்னையிலும் ம மதுரையிலும் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சமூக நலன் சார்ந்த பாடல்கள் :
1. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம். – கண்ணதாசன்
2. கொடுத்த தெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான். – வாலி
3. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்ப அயல் நாட்டில்
4. “போர் படைதனில் தூங்கியவன்
வெற்றி இழந்தான்.
உயர் பள்ளியில் தூங்கியவன்
கல்வி இழந்தான்.
கடைதனில் தூங்கியவன்
முதல் இழந்தான்.
கொண்ட கடமையில் தூங்கியவன்
புகழ் இழந்தான்.”
– பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்
5. “உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்” – புலமைப்பித்தன்
6. நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இந்த ஏழைகள் வேதனை படமாட்டார் .
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீ ர் கடலிலே விழமாட்டார்.
தெரிந்து தெளிவோம்
(i) கேரளாவைச் சேர்ந்தவர்களாகிய எம்.ஜி.ஆரின் பெற்றோர் குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்தனர். இலங்கையில் உள்ள கண்டியில் கி.பி.(பொ.ஆ.) 1917 சனவரித் திங்கள் பதினேழாம் நாள் கோபாலன் – சத்துயபாமா இணையருக்கு ஐந்தாம் மகனாக எம்.ஜி.ஆர். பிறந்தார். இவர் குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் தாயார் குழந்தைகளுடன் தமிழ்நாட்டுக்கு வந்து, கும்பகோணத்தில் குடியேறினார்.
(ii) சென்னைப் பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது. தமிழக அரசு அவர் நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது; சென்னைக் கடற்கரையில் இவருக்கு எழிலார்ந்த நினைவிடம் ஒன்றையும் அமைத்துள்ளது. அவரது இறப்புக்குப்பின் இந்திய அரசு, மிக உயரிய பாரத ரத்னா (இந்திய மாமணி) விருதினை 1988ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.
(iii) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஒட்டி (2017-2018) தமிழக அரசால் சென்னையிலும் ம மதுரையிலும் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டிய செயல்பாடு.
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டிய செயல்பாடு.
1. ஒளவையார்
2. அள்ளூர் நன்முல்லையார்
3. ஆதிமந்தி
4. ஓக்கூர் மாசாத்தியார்
5. காக்கைப்பாடினியார்
6. நப்பசலையார்
7. காவற்பெண்டு
8. வெள்ளிவீதியார்
9. பொன்முடியார்
10. முடத்தாமக்கண்ணியார்
11. வெண்ணிக்குயத்தியார்
தெரிந்து தெளிவோம்
(i) சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீந் தனையே. – ஔவையார்
(ii) இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன் நகரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே. – ஔவையார்
1. ஒளவையார்
2. அள்ளூர் நன்முல்லையார்
3. ஆதிமந்தி
4. ஓக்கூர் மாசாத்தியார்
5. காக்கைப்பாடினியார்
6. நப்பசலையார்
7. காவற்பெண்டு
8. வெள்ளிவீதியார்
9. பொன்முடியார்
10. முடத்தாமக்கண்ணியார்
11. வெண்ணிக்குயத்தியார்
தெரிந்து தெளிவோம்
(i) சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீந் தனையே. – ஔவையார்
(ii) இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன் நகரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே. – ஔவையார்
வல்லினம் மிகும் இடம் :
(i) தாக்குதலைக் கண்ட – இரண்டாம் வேற்றுமை விரி
(ii) தாவிக்குதித்து – வினையெச்சம்
(iii) இந்தத் திட்டம் – “இந்த” சுட்டுத் திரிபு
(iv) கலிங்கப்படையினர் – கலிங்கம் + படை : மகரமெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்துள்ளது.
(v) இறப்புக்குப்பின் – நான்காம் வேற்றுமை விரி
வல்லினம் மிகா இடம் :
(i) சிறுசிறு – அடுக்குத்தொடர்
(ii) காமராசர் காலத்தில் – எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
(iii) நடித்த கதைமாந்தர் – பெயரெச்சத் தொடர்
(iv) பாடம் படிக்கின்றனர் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
(v) இரண்டு சிறுவர்கள் – எண்ணுப் பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் தவிர பிற எண்ணுப் பெயர்களில் வல்லினம் மிகாது.
(vi) துணைவியாரது காலணி – ஆறாம் வேற்றுமைத் தொடர்
வல்லினம் மிகும் இடம் :
(i) தாக்குதலைக் கண்ட – இரண்டாம் வேற்றுமை விரி
(ii) தாவிக்குதித்து – வினையெச்சம்
(iii) இந்தத் திட்டம் – “இந்த” சுட்டுத் திரிபு
(iv) கலிங்கப்படையினர் – கலிங்கம் + படை : மகரமெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்துள்ளது.
(v) இறப்புக்குப்பின் – நான்காம் வேற்றுமை விரி
வல்லினம் மிகா இடம் :
(i) சிறுசிறு – அடுக்குத்தொடர்
(ii) காமராசர் காலத்தில் – எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
(iii) நடித்த கதைமாந்தர் – பெயரெச்சத் தொடர்
(iv) பாடம் படிக்கின்றனர் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
(v) இரண்டு சிறுவர்கள் – எண்ணுப் பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் தவிர பிற எண்ணுப் பெயர்களில் வல்லினம் மிகாது.
(vi) துணைவியாரது காலணி – ஆறாம் வேற்றுமைத் தொடர்
இ) முழை
இ) முழை
ஆ) அச்சம்
ஆ) அச்சம்
ஆ) வெம்மை + கரி
ஆ) வெம்மை + கரி
இ) போலுடன்றன
இ) போலுடன்றன
ஆ) தரிசனம்
ஆ) தரிசனம்
அ) வையம்
அ) வையம்
இ) சீவன் + இல்லாமல்
இ) சீவன் + இல்லாமல்
ஈ) விலங்கு + ஒடித்து
ஈ) விலங்கு + ஒடித்து
ஆ) காட்டையெரித்து
ஆ) காட்டையெரித்து
அ) இதந்தரும்
அ) இதந்தரும்
ஆ) கும்பகோணம்
ஆ) கும்பகோணம்
இ) குடும்ப வறுமை
இ) குடும்ப வறுமை
ஆ) பாரத்
ஆ) பாரத்
இ) மதுரை
இ) மதுரை
அ) மதிய உணவுத் திட்டம்
அ) மதிய உணவுத் திட்டம்
சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் நடுங்கியமை :
(i) சோழ வீரர்களைக் கண்ட கலிங்கர் இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர்.
(ii) தம்மை எரிக்க வந்த தீயோ என அஞ்சினர்.
(iii) சோழர் படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர்.
(iv) தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி, அலைந்து குலைந்து நடுங்கினர்.
சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் நடுங்கியமை :
(i) சோழ வீரர்களைக் கண்ட கலிங்கர் இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர்.
(ii) தம்மை எரிக்க வந்த தீயோ என அஞ்சினர்.
(iii) சோழர் படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர்.
(iv) தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதோ என எண்ணி, அலைந்து குலைந்து நடுங்கினர்.
கலிங்க வீரர்கள் அஞ்சி ஓடியமை :
(i) சோழர் படையைக் கண்டு அஞ்சி நடுங்கிய கலிங்கப்படையினர் படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர்.
(ii) சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர்.
(iii) சிலர் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர்.
(iv) எத்திசையில் செல்வது எனத் தெரியாமல் செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.
கலிங்க வீரர்கள் அஞ்சி ஓடியமை :
(i) சோழர் படையைக் கண்டு அஞ்சி நடுங்கிய கலிங்கப்படையினர் படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர்.
(ii) சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர்.
(iii) சிலர் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர்.
(iv) எத்திசையில் செல்வது எனத் தெரியாமல் செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.
சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் :
(i) சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளறின.
(ii) அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்.
(iii) ஏனையோர் புறமுதுகு காட்டி ஓடிப்பிழைத்தனர்.
சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் :
(i) சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளறின.
(ii) அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்.
(iii) ஏனையோர் புறமுதுகு காட்டி ஓடிப்பிழைத்தனர்.
இந்தியா அந்நியரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே பகத்சிங் கண்ட கனவு ஆகும்.
இந்தியா அந்நியரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே பகத்சிங் கண்ட கனவு ஆகும்.
முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் ஆட்சியை இருண்ட ஆட்சி என மீரா குறிப்பிடுகிறார்.
முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் ஆட்சியை இருண்ட ஆட்சி என மீரா குறிப்பிடுகிறார்.
எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் :
எம்.ஜி.ஆர். குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் தாயார் (இலங்கை) கண்டியில் இருந்து குழந்தைகளுடன் கும்பகோணத்திற்கு வந்து குடியேறினார். அங்குள்ள ஆனையடிப் பள்ளியில் பயின்றார். குடும்பநிலை காரணமாகப் படிப்பைத் தொடர முடியாமல் நாடகத் துறையில் ஈடுபட்டார்.
எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் :
எம்.ஜி.ஆர். குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் தாயார் (இலங்கை) கண்டியில் இருந்து குழந்தைகளுடன் கும்பகோணத்திற்கு வந்து குடியேறினார். அங்குள்ள ஆனையடிப் பள்ளியில் பயின்றார். குடும்பநிலை காரணமாகப் படிப்பைத் தொடர முடியாமல் நாடகத் துறையில் ஈடுபட்டார்.
திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் :
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்.
திரைத்துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் :
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்.
எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்கள் :
(i) உழவர்களின் கடன் தள்ளுபடி.
(ii) ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்.
(iii) ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித்திட்டம்.
(iv) தாய்சேய் நல இல்லங்கள்.
(v) பற்பொடி வழங்கும் திட்டம்.
(vi) நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாடநூல் வழங்கும் திட்டம்.
(vii) முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்.
(viii) வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம். (மாணவர்கள் இவற்றில் எவையேனும் நான்கனை மட்டும் எழுதினால் போதுமானது)
எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்கள் :
(i) உழவர்களின் கடன் தள்ளுபடி.
(ii) ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்.
(iii) ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித்திட்டம்.
(iv) தாய்சேய் நல இல்லங்கள்.
(v) பற்பொடி வழங்கும் திட்டம்.
(vi) நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பாடநூல் வழங்கும் திட்டம்.
(vii) முதியோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்.
(viii) வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம். (மாணவர்கள் இவற்றில் எவையேனும் நான்கனை மட்டும் எழுதினால் போதுமானது)
சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப்படை வீரர்களின் செயல்கள் :
(i) சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர், இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர். தம்மை எரிக்கவந்த தீயோ என அஞ்சினர். சோழர் படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர். தமது இறுதிக்காலம் நெருங்கி விட்டதோ என எண்ணி அலைந்து குலைந்து நடுங்கினர்.
(ii) அப்படி நடுங்கிய கலிங்கப் படையினர் படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். சிலர் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர். எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.
(iii) கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும் மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருதாக எண்ணி அஞ்சினர் தஞ்சம் வேண்டி வணங்கினர்.
(iv) சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப்போலப் பிளிறின. அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்; ஏனையோர் புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர்.
சோழ வீரர்களைக் கண்ட கலிங்கப்படை வீரர்களின் செயல்கள் :
(i) சோழர் படையின் தாக்குதலைக் கண்ட கலிங்கர், இஃது என்ன மாய வித்தையா என வியந்தனர். தம்மை எரிக்கவந்த தீயோ என அஞ்சினர். சோழர் படை தம் உயிரைப் பறிக்கும் காலனோ என அஞ்சினர். தமது இறுதிக்காலம் நெருங்கி விட்டதோ என எண்ணி அலைந்து குலைந்து நடுங்கினர்.
(ii) அப்படி நடுங்கிய கலிங்கப் படையினர் படைக்கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். சிலர் கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். சிலர் யானைகளின் பின்னே மறைந்து கொண்டனர். எத்திசையில் செல்வது எனத் தெரியாமல், செல்வதற்கு அரிதான மலைக் குகைகளினுள்ளும் புதர்களுக்குள்ளும் தப்பி ஓடினர்.
(iii) கலிங்க வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தம் நிழலையும் மற்றவர் நிழலையும் கண்டு தமிழர்கள் துரத்தி வருதாக எண்ணி அஞ்சினர் தஞ்சம் வேண்டி வணங்கினர்.
(iv) சோழ மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப்போலப் பிளிறின. அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள் சென்று மறைந்தனர்; ஏனையோர் புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர்.
(i) முந்நூறு ஆண்டுகள் அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது. உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டினோம்.
(ii) அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத்தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளிக்கின்றாள்.
(i) முந்நூறு ஆண்டுகள் அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது. உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டினோம்.
(ii) அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத்தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளிக்கின்றாள்.
பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த நிகழ்வு :
எம்.ஜி.ஆர். ஒருமுறை வெளியூரிலிருந்து மகிழ்வுந்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் மூதாட்டி ஒருவரும் பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் தலையில் புல்கட்டுகளைச் சுமந்தவாறு கால்களில் காலணிகள் இல்லாமல் சென்று கொண்டிருந்தனர்.
சாலையின் சூடு பொறுக்க முடியாமல் அவர்கள் சாலையோர மரநிழலில் நிற்பதும் ஓடுவதுமாக இருந்ததைக் கண்ட எம்.ஜி.ஆர். உடனே தமது மகிழ்வுந்தை நிறுத்தச் செய்தார்.
உடன் வந்த தமது துணைவியாரது காலணியையும் உறவினரான பெண்ணின் காலணியையும் அவர்களிடம் கொடுக்கச் செய்தார். மேலும் அவர்களுக்குப் பணமும் கொடுத்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஏழை எளியவர்கள் காலில் காலணிகூட இல்லாமல் நடந்து செல்லும் இந்நிகழ்ச்சி அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனால், பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த நிகழ்வு :
எம்.ஜி.ஆர். ஒருமுறை வெளியூரிலிருந்து மகிழ்வுந்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் மூதாட்டி ஒருவரும் பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் தலையில் புல்கட்டுகளைச் சுமந்தவாறு கால்களில் காலணிகள் இல்லாமல் சென்று கொண்டிருந்தனர்.
சாலையின் சூடு பொறுக்க முடியாமல் அவர்கள் சாலையோர மரநிழலில் நிற்பதும் ஓடுவதுமாக இருந்ததைக் கண்ட எம்.ஜி.ஆர். உடனே தமது மகிழ்வுந்தை நிறுத்தச் செய்தார்.
உடன் வந்த தமது துணைவியாரது காலணியையும் உறவினரான பெண்ணின் காலணியையும் அவர்களிடம் கொடுக்கச் செய்தார். மேலும் அவர்களுக்குப் பணமும் கொடுத்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.
ஏழை எளியவர்கள் காலில் காலணிகூட இல்லாமல் நடந்து செல்லும் இந்நிகழ்ச்சி அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனால், பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் :
(i) பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுத்து முறையை எளிமைப்படுத்தினார்.
(ii) மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.
(iii) தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர். ஆற்றிய பணிகள் :
(i) பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுத்து முறையை எளிமைப்படுத்தினார்.
(ii) மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.
(iii) தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்.
வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்கள் :
(i) இரண்டாம் வேற்றுமை உருபாதிய வெளிப்படையாக வருடத்தில் வல்லினம் மிகும்
எ.கா. தலையைக் காட்டு.
(ii) நான்காம் வேற்றுமை உருபாகிய ‘கு’ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.
எ.கா. எனக்குத் தெரியும்.
வேற்றுமைகளில் வல்லினம் மிகும் இடங்கள் :
(i) இரண்டாம் வேற்றுமை உருபாதிய வெளிப்படையாக வருடத்தில் வல்லினம் மிகும்
எ.கா. தலையைக் காட்டு.
(ii) நான்காம் வேற்றுமை உருபாகிய ‘கு’ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.
எ.கா. எனக்குத் தெரியும்.
வல்லினம் மிகாத் தொடர்கள் :
(i) எழுவாய்த் தொடர் – தம்பி படித்தான்
(ii) பெயரெச்சம் – எழுதிய பாடல்
(iii) எதிர்மறைப் பெயரெச்சம் – எழுதாத பாடல்
(iv) வினைத் தொகை – சுடுசோறு
(v) உம்மைத் தொகை – தாய்தந்தை
மொழியை ஆள்வோம்
கேட்க
வல்லினம் மிகாத் தொடர்கள் :
(i) எழுவாய்த் தொடர் – தம்பி படித்தான்
(ii) பெயரெச்சம் – எழுதிய பாடல்
(iii) எதிர்மறைப் பெயரெச்சம் – எழுதாத பாடல்
(iv) வினைத் தொகை – சுடுசோறு
(v) உம்மைத் தொகை – தாய்தந்தை
மொழியை ஆள்வோம்
கேட்க
மாணவர்கள் தாங்களாகவே நாட்டுப்பற்றை வளர்க்கும் நாடகங்களை ஒலிப்பதிவுகளை கேட்டு மகிழ வேண்டும்.
கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.
மாணவர்கள் தாங்களாகவே நாட்டுப்பற்றை வளர்க்கும் நாடகங்களை ஒலிப்பதிவுகளை கேட்டு மகிழ வேண்டும்.
கீழ்க்காணும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக.
நான் முதலமைச்சரானால் நம் தமிழ்நாட்டிற்குப் பல நன்மைகள் செய்வேன். நான் முதலில் கல்வியில் சீர்திருத்தம் செய்வேன். அழியாத சொத்து கல்வி. கல்வி எவராலும் எப்போதும் அழிக்க முடியாத சொத்து. அதுமட்டுமன்று. ஒரு நாட்டில் அனைத்தையும் ஆக்கும் வல்லமை கல்விக்கு மட்டும்தான் உண்டு.
கல்வித்துறையினர் நினைத்தால் உயர்ந்த அறிவும், ஆற்றலும், பெருமையும், பொருள் வளமும் உள்ள மக்களை உருவாக்க முடியும். ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டில் கல்வித்துறை எவ்வளவு வளர்ச்சியடைந்தது என்பதைப் பொருத்துத்தான் உள்ளது. நாடு கல்வியால் உயர்ந்தால் வல்லரசு நாடாக மாறும்.
அதனால் என் முதல் பணியே கல்வியை மேம்படுத்துவதுதான். கல்வி கேள்வியில் சிறந்த சான்றோர்களின் ஆலோசனையின்படி பல புதிய சீர்திருத்தம் மேற்கொள்வேன். கிராமப்புற மாணவர்களும் கல்வி கற்கும் வண்ணம் சட்டங்கள் இயற்றுவேன்.
அடுத்ததாகப் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு நான் முனைந்து பாடுபடுவேன். அதற்கு உற்பத்திப் பெருக்கம் செய்து பொருள்களை ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியைப் பெருமளவில் ஈட்டுவேன்.
வேளாண்மையில் புதுமைகள் செய்வேன். பலவிதமான உதவிகளை உழவர்களுக்குச் செய்து, அவர்கள் நன்முறையில் வேளாண் தொழிலை வளர்ப்பதற்கு வழி செய்வேன். நவீன முறை விவசாயமான வேதியுரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்தி இயற்கை வேளாண்மையான அங்க வேளாண்மையை செய்யும்படி வலியுறுத்துவேன்.
ஏரி குளங்களைத் தூர்வாரி நீர்நிலைகளை வளப்படுத்துவேன். அணைகள் தேவையெனில் அணைகள் கட்டி நீர்ப்பாசன வசதியைப் பெருக்குவேன். விலைவாசிகள் ஏறாதபடி பார்த்துக்கொள்வேன்.
சமுதாயத்தின் சீர்கேடுகளை குலைக்கும் எத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தமாட்டேன். அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவேன். அரசு வேலை அல்லது அரசு சார்ந்த வேலை இவற்றின் மூலம் தகுதி வாய்ந்த இளைஞர்களை பணியில் அமர்த்துவேன். மக்கள் செல்வச் செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ என்னென்ன செய்ய இயலுமோ அவற்றைக் கட்டாயம் செய்வேன். என்னுடைய தலைமையின் கீழ் உள்ள மக்கள் அச்சமின்றி வாழவும் வழி செய்வேன். நன்றி!
சொல்லக் கேட்டு எழுதுக
அனைவருக்கும் தலைவராகும் விருப்பம் இருக்கலாம். ஆனால் சிறந்த ஆளுமைப் பண்பும் அனைவரையும் கட்டுப்படுத்தும் திறனும் இருப்பவர்களால்தான் தலைவர்கள் ஆக முடிகிறது. எடுத்துக்காட்டாகப் பின்வரும் நிகழ்வுகளைக் காணலாம். ஒரு விளையாட்டு அணியின் தலைவருக்கான தேர்வு நடந்தது.
அணியின் பயிற்சியாளர் வீரர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொண்டார். சிலர் தங்களைத் தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப் என அறிமுகப்படுத்திக் கொள்ள, ஒருவர் மட்டும் தன்னை ‘இந்தியர்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவர்தான் அணியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காரணம் மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டியதும். ‘இந்தியர்’ என்று குழுவாகச் சிந்தித்ததுமே ஆகும். இப்படிப்பட்ட தகுதிகள் இருந்தால் நீங்களும் தலைவர் ஆகலாம்.
அறிந்து பயன்படுத்துவோம்
எதிர்மறைச் சொற்கள்
வந்தது நீ அல்ல; பார்த்தது நான் அல்ல; நான் படித்த புத்தகம் இது அல்ல என்றெல்லாம் பேசுகின்றோம். இவையெல்லாம் சரியான தொடர்கள் அல்ல. எதிர்மறை வினைமுற்றுகள் பல உண்டு. அவற்றை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.
பின்வரும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
நான் முதலமைச்சரானால் நம் தமிழ்நாட்டிற்குப் பல நன்மைகள் செய்வேன். நான் முதலில் கல்வியில் சீர்திருத்தம் செய்வேன். அழியாத சொத்து கல்வி. கல்வி எவராலும் எப்போதும் அழிக்க முடியாத சொத்து. அதுமட்டுமன்று. ஒரு நாட்டில் அனைத்தையும் ஆக்கும் வல்லமை கல்விக்கு மட்டும்தான் உண்டு.
கல்வித்துறையினர் நினைத்தால் உயர்ந்த அறிவும், ஆற்றலும், பெருமையும், பொருள் வளமும் உள்ள மக்களை உருவாக்க முடியும். ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டில் கல்வித்துறை எவ்வளவு வளர்ச்சியடைந்தது என்பதைப் பொருத்துத்தான் உள்ளது. நாடு கல்வியால் உயர்ந்தால் வல்லரசு நாடாக மாறும்.
அதனால் என் முதல் பணியே கல்வியை மேம்படுத்துவதுதான். கல்வி கேள்வியில் சிறந்த சான்றோர்களின் ஆலோசனையின்படி பல புதிய சீர்திருத்தம் மேற்கொள்வேன். கிராமப்புற மாணவர்களும் கல்வி கற்கும் வண்ணம் சட்டங்கள் இயற்றுவேன்.
அடுத்ததாகப் பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு நான் முனைந்து பாடுபடுவேன். அதற்கு உற்பத்திப் பெருக்கம் செய்து பொருள்களை ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியைப் பெருமளவில் ஈட்டுவேன்.
வேளாண்மையில் புதுமைகள் செய்வேன். பலவிதமான உதவிகளை உழவர்களுக்குச் செய்து, அவர்கள் நன்முறையில் வேளாண் தொழிலை வளர்ப்பதற்கு வழி செய்வேன். நவீன முறை விவசாயமான வேதியுரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்தி இயற்கை வேளாண்மையான அங்க வேளாண்மையை செய்யும்படி வலியுறுத்துவேன்.
ஏரி குளங்களைத் தூர்வாரி நீர்நிலைகளை வளப்படுத்துவேன். அணைகள் தேவையெனில் அணைகள் கட்டி நீர்ப்பாசன வசதியைப் பெருக்குவேன். விலைவாசிகள் ஏறாதபடி பார்த்துக்கொள்வேன்.
சமுதாயத்தின் சீர்கேடுகளை குலைக்கும் எத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தமாட்டேன். அதிகமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவேன். அரசு வேலை அல்லது அரசு சார்ந்த வேலை இவற்றின் மூலம் தகுதி வாய்ந்த இளைஞர்களை பணியில் அமர்த்துவேன். மக்கள் செல்வச் செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ என்னென்ன செய்ய இயலுமோ அவற்றைக் கட்டாயம் செய்வேன். என்னுடைய தலைமையின் கீழ் உள்ள மக்கள் அச்சமின்றி வாழவும் வழி செய்வேன். நன்றி!
சொல்லக் கேட்டு எழுதுக
அனைவருக்கும் தலைவராகும் விருப்பம் இருக்கலாம். ஆனால் சிறந்த ஆளுமைப் பண்பும் அனைவரையும் கட்டுப்படுத்தும் திறனும் இருப்பவர்களால்தான் தலைவர்கள் ஆக முடிகிறது. எடுத்துக்காட்டாகப் பின்வரும் நிகழ்வுகளைக் காணலாம். ஒரு விளையாட்டு அணியின் தலைவருக்கான தேர்வு நடந்தது.
அணியின் பயிற்சியாளர் வீரர்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொண்டார். சிலர் தங்களைத் தமிழ்நாடு, கேரளம், பஞ்சாப் என அறிமுகப்படுத்திக் கொள்ள, ஒருவர் மட்டும் தன்னை ‘இந்தியர்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவர்தான் அணியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காரணம் மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டியதும். ‘இந்தியர்’ என்று குழுவாகச் சிந்தித்ததுமே ஆகும். இப்படிப்பட்ட தகுதிகள் இருந்தால் நீங்களும் தலைவர் ஆகலாம்.
அறிந்து பயன்படுத்துவோம்
எதிர்மறைச் சொற்கள்
வந்தது நீ அல்ல; பார்த்தது நான் அல்ல; நான் படித்த புத்தகம் இது அல்ல என்றெல்லாம் பேசுகின்றோம். இவையெல்லாம் சரியான தொடர்கள் அல்ல. எதிர்மறை வினைமுற்றுகள் பல உண்டு. அவற்றை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.
பின்வரும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
பானையை உடைத்தது கண்ணன் அல்லன்.
பானையை உடைத்தது கண்ணன் அல்லன்.
சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்.
சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்.
பகைவர் நீவீர் அல்லீர்.
சரியான எதிர்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக.
1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை …………….
2. உங்களோடு வருவோர் ……………. அல்லோம்.
3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் …………….
4. மொய்த்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன ……………
5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் …………. அல்லை.
1. அல்ல
2. நாம்
3. அல்லள்
4. அன்ற
5. நீ
கட்டுரை எழுதுக.
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு
முன்னுரை :
‘விதைத்ததே விளையும்’ என்பது நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற பொன்மொழியாகும். ஒரு மனிதன் தன் இளமைப் பருவத்தில் கற்றுக் கொள்பவைகளைப் பின்பற்றியே வாழ்கிறான். ஆதலால் இப்பருவத்தில் தொண்டு செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மாற்றங்களின் விதை :
‘இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது’ என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களின் மாறுபட்ட அணுகுமுறை நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும். அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இவை மாற்றங்களுக்கு வித்திடுகிறது.
தொண்டு :
இளைஞர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும் நாடும் நலம் பெறும். பிற உயிரினங்களின் துன்பத்தைக் கண்டு அதனைத் தாங்கிக்கொள்ளாமல் உடனே ஓடிச் சென்று உதவுவதுதான் தொண்டு.
இளைஞர்களின் பங்கு :
வறுமை, கல்வியின்மை , அறியாமை, சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சமுதாயம் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் ஓர் உறுப்பாய் விளங்கும் இளைஞர்கள் இச்சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான செயல்களைச் செய்ய வேண்டும்.
பிற பணிகள் :
புயல் வெள்ளம் போன்ற காலங்களில் மீட்புக் குழுவினரோடு சேர்ந்து ஐம்பது சதவீதம் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். இது போதாது. அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும். காலரா, பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
முடிவுரை :
மக்களுக்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டவுடன் உதவி புரியும் தொண்டுள்ளம் படைத்த இளைஞர்களாலேயே நாடு வளம் பெறும் நலம் பெறும், என்பதை உணர்வோமாக.
மொழியோடு விளையாடு
வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.
கதை நிகழ்வுக்கேற்பச் சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துக.
1. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
3. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
4. அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
5. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
6. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
1. அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
3. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
4. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
5. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
6. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள் …
1. தலைமைக்குரிய பண்புகளை அறிந்து வளர்த்துக் கொள்வேன்.
2. சமூக மாற்றத்திற்குக் காரணமான தலைவர்களின் வரலாறுகளை அறிந்து போற்றுவேன்.
கலைச்சொல் அறிவோம்
1. குதிரையேற்றம் – Equestrian
2. கதாநாயகன் – The Hero
3. முதலமைச்சர் – Chief Minister
4. தலைமைப்பண்பு – Leadership
5. ஆதரவு – Support
6. வரி – Tax
7. வெற்றி – Victory
8. சட்டமன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly
பகைவர் நீவீர் அல்லீர்.
சரியான எதிர்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக.
1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை …………….
2. உங்களோடு வருவோர் ……………. அல்லோம்.
3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் …………….
4. மொய்த்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன ……………
5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் …………. அல்லை.
1. அல்ல
2. நாம்
3. அல்லள்
4. அன்ற
5. நீ
கட்டுரை எழுதுக.
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு
முன்னுரை :
‘விதைத்ததே விளையும்’ என்பது நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற பொன்மொழியாகும். ஒரு மனிதன் தன் இளமைப் பருவத்தில் கற்றுக் கொள்பவைகளைப் பின்பற்றியே வாழ்கிறான். ஆதலால் இப்பருவத்தில் தொண்டு செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மாற்றங்களின் விதை :
‘இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது’ என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களின் மாறுபட்ட அணுகுமுறை நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும். அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இவை மாற்றங்களுக்கு வித்திடுகிறது.
தொண்டு :
இளைஞர்கள் சமுதாய உணர்வுடையவர்களாய் வளர்ந்தால்தான் வீடும் நாடும் நலம் பெறும். பிற உயிரினங்களின் துன்பத்தைக் கண்டு அதனைத் தாங்கிக்கொள்ளாமல் உடனே ஓடிச் சென்று உதவுவதுதான் தொண்டு.
இளைஞர்களின் பங்கு :
வறுமை, கல்வியின்மை , அறியாமை, சாதி, மத வேறுபாடுகள், தீண்டாமை, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகிய கொடுமைகளால் சமுதாயம் சிதைந்துள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் வாழும் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். சமுதாயத்தின் ஓர் உறுப்பாய் விளங்கும் இளைஞர்கள் இச்சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான செயல்களைச் செய்ய வேண்டும்.
பிற பணிகள் :
புயல் வெள்ளம் போன்ற காலங்களில் மீட்புக் குழுவினரோடு சேர்ந்து ஐம்பது சதவீதம் இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள். இது போதாது. அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும். காலரா, பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா போன்ற நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
முடிவுரை :
மக்களுக்கு ஏற்படும் துன்பத்தைக் கண்டவுடன் உதவி புரியும் தொண்டுள்ளம் படைத்த இளைஞர்களாலேயே நாடு வளம் பெறும் நலம் பெறும், என்பதை உணர்வோமாக.
மொழியோடு விளையாடு
வட்டத்தில் உள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.
கதை நிகழ்வுக்கேற்பச் சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துக.
1. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
3. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
4. அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
5. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
6. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
1. அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவைக்குத் தெரிவித்தல்.
3. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
4. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
5. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
6. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள் …
1. தலைமைக்குரிய பண்புகளை அறிந்து வளர்த்துக் கொள்வேன்.
2. சமூக மாற்றத்திற்குக் காரணமான தலைவர்களின் வரலாறுகளை அறிந்து போற்றுவேன்.
கலைச்சொல் அறிவோம்
1. குதிரையேற்றம் – Equestrian
2. கதாநாயகன் – The Hero
3. முதலமைச்சர் – Chief Minister
4. தலைமைப்பண்பு – Leadership
5. ஆதரவு – Support
6. வரி – Tax
7. வெற்றி – Victory
8. சட்டமன்ற உறுப்பினர் – Member of Legislative Assembly
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையானவை :
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இயற்கை அரண்களாக மலைவளம், வனவளம், நீர்வளம் அவசியம். தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் நாம் இயற்கையை மறந்து செயற்கையை வாழ வைக்கிறோம். அதனை முற்றிலும் கைவிடவேண்டும். நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அதற்கு மாறாக துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும். நீர்வளம் பெருக வனவளம் காக்க வேண்டும்.
நாட்டில் நல்லறங்கள் பெருக வேண்டும். இதனால் சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி காக்கப்படும். அண்டை நாடுகளுடன் பிணக்கின்றி இருக்கலாம். எல்லையில் உள்ள வீரர்களின் குடும்பங்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் குடும்பத்தைப் பற்றிய கவலையின்றி நாட்டைப் பாதுகாப்பர். இதனால் தீவிரவாதமும் ஒடுக்கப்படும். அண்டை நாட்டினரிடமிருந்து நாட்டையும் பாதுகாக்கலாம்.
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவையானவை :
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இயற்கை அரண்களாக மலைவளம், வனவளம், நீர்வளம் அவசியம். தற்போது வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் நாம் இயற்கையை மறந்து செயற்கையை வாழ வைக்கிறோம். அதனை முற்றிலும் கைவிடவேண்டும். நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அதற்கு மாறாக துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும். நீர்வளம் பெருக வனவளம் காக்க வேண்டும்.
நாட்டில் நல்லறங்கள் பெருக வேண்டும். இதனால் சண்டை சச்சரவுகள் நீங்கி அமைதி காக்கப்படும். அண்டை நாடுகளுடன் பிணக்கின்றி இருக்கலாம். எல்லையில் உள்ள வீரர்களின் குடும்பங்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் குடும்பத்தைப் பற்றிய கவலையின்றி நாட்டைப் பாதுகாப்பர். இதனால் தீவிரவாதமும் ஒடுக்கப்படும். அண்டை நாட்டினரிடமிருந்து நாட்டையும் பாதுகாக்கலாம்.
(i) நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாள் விழாவில் பலகலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த வேண்டும்.
(ii) நம்மைப் பெற்றெடுத்த தாயை எவ்வாறு போற்றுவோமோ, அதேபோல் நம் தாய்நாட்டின் பெருமையையும் பழமையையும் மாணவர்கள் அறியும்படி உரையாற்ற வேண்டும்.
(iii) நாம் அடிமைகளாய் இருந்ததைக் கூறி அடிமைத்தளையை நீக்கியவர்களின் தியாகத்தைக் கூறும் வகையில் சிறு நாடகம் நடத்த வேண்டும்.
(iv) சாதி, மத பேதங்களினால் நாம் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
(v) நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும். தேசிய சின்னங்கள், தேசியக் கொடி, தேசியப்பாடல் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டும். நாட்டிற்குச் சேவை செய்ய எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஊர்க்காவல் படை, மாணவர் தேசியப்படை ஆகியவற்றில் பங்காற்றல் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு விடுதலை நாளைக் கொண்டாடலாம்.
(i) நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாள் விழாவில் பலகலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த வேண்டும்.
(ii) நம்மைப் பெற்றெடுத்த தாயை எவ்வாறு போற்றுவோமோ, அதேபோல் நம் தாய்நாட்டின் பெருமையையும் பழமையையும் மாணவர்கள் அறியும்படி உரையாற்ற வேண்டும்.
(iii) நாம் அடிமைகளாய் இருந்ததைக் கூறி அடிமைத்தளையை நீக்கியவர்களின் தியாகத்தைக் கூறும் வகையில் சிறு நாடகம் நடத்த வேண்டும்.
(iv) சாதி, மத பேதங்களினால் நாம் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
(v) நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும். தேசிய சின்னங்கள், தேசியக் கொடி, தேசியப்பாடல் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டும். நாட்டிற்குச் சேவை செய்ய எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஊர்க்காவல் படை, மாணவர் தேசியப்படை ஆகியவற்றில் பங்காற்றல் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு விடுதலை நாளைக் கொண்டாடலாம்.
சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகள் :
(i) விடாமுயற்சியுடனும் சுய அறிவாற்றலுடனும் அவர்களுக்கென தனிப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுதல்.
(ii) பொறுமையுடன் செயல்களைச் செய்தல், தன்னிடம் வரும் பிரச்சனைகளைப் பொறுமையுடன் தீர்த்து வைத்தல்.
(iii) குறைவாய்ப் பேசி நிறைவாய் வேலை செய்யும் மனமுடையவராய் இருத்தல்.
(iv) இது இல்லை அது இல்லை என்று கூறாமல் ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பதைப் போல் இருக்கும் வளத்தைப் பயன்படுத்தி செயல்களைச் செய்தல்.
(v) பிறருடைய கருத்துகளுக்கும் மதிப்பு அளித்தல்.
(vi) தன்னிடம் நியாயம் இருந்தாலும் யாரிடமும் விவாதம் செய்யாமல் இருத்தல்.
சிறந்த அரசியல் தலைவருக்கு இருக்க வேண்டிய பண்புகள் :
(i) விடாமுயற்சியுடனும் சுய அறிவாற்றலுடனும் அவர்களுக்கென தனிப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுதல்.
(ii) பொறுமையுடன் செயல்களைச் செய்தல், தன்னிடம் வரும் பிரச்சனைகளைப் பொறுமையுடன் தீர்த்து வைத்தல்.
(iii) குறைவாய்ப் பேசி நிறைவாய் வேலை செய்யும் மனமுடையவராய் இருத்தல்.
(iv) இது இல்லை அது இல்லை என்று கூறாமல் ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பதைப் போல் இருக்கும் வளத்தைப் பயன்படுத்தி செயல்களைச் செய்தல்.
(v) பிறருடைய கருத்துகளுக்கும் மதிப்பு அளித்தல்.
(vi) தன்னிடம் நியாயம் இருந்தாலும் யாரிடமும் விவாதம் செய்யாமல் இருத்தல்.
எம்.ஜி.ஆரின் பண்புநலன்கள் :
எம்.ஜி.ஆர். ஒரு முறை வெளியூரிலிருந்து மகிழ்வுந்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் மூதாட்டி ஒருவரும் பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் தலையில் புல்கட்டுகளைச் சுமந்தவாறு கால்களில் காலணிகள் இல்லாமல் சென்று கொண்டிருந்தனர். சாலையின் சூடு பொறுக்க முடியாமல் அவர்கள் சாலையோர மரநிழலில் நிற்பதும் ஓடுவதுமாக இருந்ததைக் கண்ட எம்.ஜி.ஆர். உடனே தமது மகிழ்வுந்தை நிறுத்தச் செய்தார்.
உடன் வந்த தமது துணைவியாரது காலணியையும் உறவினரான பெண்ணின் காலணியையும் அவர்களிடம் கொடுக்கச் செய்தார். மேலும் அவர்களுக்குப் பணமும் கொடுத்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். ஏழை எளியவர்கள் காலில் காலணிகூட இல்லாமல் நடந்து செல்லும் இந்நிகழ்ச்சி அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனால், பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தினார்.
எம்.ஜி.ஆர். ஒரு முறை படப்பிடிப்பிற்காகக் காஷ்மீருக்குச் சென்றிருந்தார். அங்கிருந்த இந்தியப் படைவீரர் நலச்சங்கத்தினர் தமது சங்கவிழாவிற்கு எம்.ஜி.ஆர். வருகைதர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அதற்கு ஒப்புக்கொண்ட அவர் அச்சங்கத்திற்கு நன்கொடை வழங்க விரும்பினார்.
ஆனால் அப்பொழுது அவரிடம் பணம் இல்லை. – எனவே, அங்குத் தங்கியிருந்த தமிழ்நாட்டுத் தொழிலதிபர் ஒருவரிடம் பெருந்தொகையைக் கடனாகப் பெற்று அதனை நன்கொடையாக வழங்கினார். சென்னை திரும்பியதும் முதல் வேலையாக அத்தொகையைத் திருப்பிக் கொடுத்தார்.
இவ்வாறு பிறர் வியக்கத்தக்க வகையில் தம் செல்வத்தை வாரி வழங்கியமையால் தான் அவரைப் பொன்மனச்செம்மல் என்று மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
எம்.ஜி.ஆரின் பண்புநலன்கள் :
எம்.ஜி.ஆர். ஒரு முறை வெளியூரிலிருந்து மகிழ்வுந்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் மூதாட்டி ஒருவரும் பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் தலையில் புல்கட்டுகளைச் சுமந்தவாறு கால்களில் காலணிகள் இல்லாமல் சென்று கொண்டிருந்தனர். சாலையின் சூடு பொறுக்க முடியாமல் அவர்கள் சாலையோர மரநிழலில் நிற்பதும் ஓடுவதுமாக இருந்ததைக் கண்ட எம்.ஜி.ஆர். உடனே தமது மகிழ்வுந்தை நிறுத்தச் செய்தார்.
உடன் வந்த தமது துணைவியாரது காலணியையும் உறவினரான பெண்ணின் காலணியையும் அவர்களிடம் கொடுக்கச் செய்தார். மேலும் அவர்களுக்குப் பணமும் கொடுத்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார். ஏழை எளியவர்கள் காலில் காலணிகூட இல்லாமல் நடந்து செல்லும் இந்நிகழ்ச்சி அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனால், பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தினார்.
எம்.ஜி.ஆர். ஒரு முறை படப்பிடிப்பிற்காகக் காஷ்மீருக்குச் சென்றிருந்தார். அங்கிருந்த இந்தியப் படைவீரர் நலச்சங்கத்தினர் தமது சங்கவிழாவிற்கு எம்.ஜி.ஆர். வருகைதர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அதற்கு ஒப்புக்கொண்ட அவர் அச்சங்கத்திற்கு நன்கொடை வழங்க விரும்பினார்.
ஆனால் அப்பொழுது அவரிடம் பணம் இல்லை. – எனவே, அங்குத் தங்கியிருந்த தமிழ்நாட்டுத் தொழிலதிபர் ஒருவரிடம் பெருந்தொகையைக் கடனாகப் பெற்று அதனை நன்கொடையாக வழங்கினார். சென்னை திரும்பியதும் முதல் வேலையாக அத்தொகையைத் திருப்பிக் கொடுத்தார்.
இவ்வாறு பிறர் வியக்கத்தக்க வகையில் தம் செல்வத்தை வாரி வழங்கியமையால் தான் அவரைப் பொன்மனச்செம்மல் என்று மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
அதியமானின் அரண்மனையில் ஒளவையார் நீண்டகாலம் தங்கியிருந்தார். அப்போது தொண்டைமான், அதியமான் இருவருக்கும் நடக்கவிருந்த போரைத் தடுத்து நிறுத்தியதைப் பற்றி இக்கதையில் காண்போம்.
ஒருநாள் அதியமான் காட்டுவளத்தைக் காணச் சென்றான். திரும்பி வரும்போது அரிய நெல்லிக்கனியைக் கொண்டு வந்து ஒளவையாரிடம் கொடுத்தான். சுவைத்துப் பார்த்த ஒளவையார் இதுவரை இவ்வளவு சுவையுள்ள கனியை தான் சுவைத்ததே இல்லை என்று கூறினார்.
அமைச்சர் “இது அரிய நெல்லிக்கனி , நமது வீரர்களால் பறிக்க இயலவில்லை . நம் மன்னரே மலையுச்சியில் இருந்த மரத்தில் ஏறிப் பறித்தார்” என்று கூறினார். மேலும் “இக்கனியை உண்டவர்கள் நோய் நொடியின்றி வாழ்வார்கள்” என்றும் கூறினார்.
அதனைக் கேட்ட ஒளவையார் வியந்து அதியமானிடம் “நீ உண்ணாமல் எனக்கு ஏன் கொடுத்தாய்?” என்று கேட்டார். அதற்கு அதியமான் “என்னைப் போன்ற அரசன் இறந்து போனால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் ஒருவர் மறைந்தால், அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது” என்று கூறினான். அதியமான் தமிழ் மீது கொண்ட பற்றினைக் கண்டு ஒளவையார் மனமுருகினார்.
மறுநாள் அதியமானின் கவலைகொண்ட முகத்தைக் கண்டு ஒளவையார் காரணம் கேட்டார். அதியமானும் “தொண்டைமான் போர்ச் செய்தி அனுப்பியுள்ளான்” என்று கூறினான். ஔவையார் அதியமானிடம் “எதற்கும் அஞ்சாத நீ போரைக் கண்டு அஞ்சலாமா?” என்று கேட்டார்.
அதியமான் தான் போரைக் கண்டு அஞ்சவில்லை என்றும் அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு அஞ்சுவதாகவும் கூறினான். அதியமானின் உள்ளத்தை அறிந்த ஒளவையார், அதியமானின் ஒப்புதலோடு தொண்டைமானைக் காணச் சென்றார்.
தொண்டைமானின் அரண்மனையில் படைத் தலைவருடன் உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது படைத்தலைவர் “அதியமான் நம் படையின் பெருக்கத்தைக் கண்டு அதிர்ந்துபோய், சமாதானம் வேண்டிப் புலவர் ஒருவரைத் தூது அனுப்பியுள்ளார்” என்று கூறினான்.
தொண்டைமான் ஒளவையாரை வரவேற்றான். போர்க்கருவிகள் நிறைந்த படைக்கலக் கொட்டிலைப் பார்க்க அழைத்துச் சென்றான். அப்படைக் கருவிகளைப் பார்த்து ஒளவையார் “அளவுக்கதிகமான கருவிகள், அழகாக அடுக்கி வைத்திருக்கும் முறை, புத்தம் புதியனவாய் நெய் பூசப்பெற்று மாலையும் மயில் தோகைகளும் அணிவிக்கப்பட்டு அழகாக உள்ளன” என்றார்.
மேலும், ‘அதியமான் எப்போதும் போர் புரிந்து கொண்டே இருப்பதால் அவனது படைக்கருவிகள் பகைவர் உடலைத் துளைத்த குருதிக் கறைகளுடன் நுனி ஒடிந்தும் கூர் மழுங்கியும் கொல்லனின் உலைக்களத்தில் கிடக்கின்றன” என்று கூறினார்.
ஒளவையாரின் பேச்சில் இருந்த உட்பொருளை உணர்ந்த தொண்டைமான். ‘தான் இதுவரை போர்க்களத்தைக் கண்டதில்லை என்றும், அதியமான் பல போர்களைக் கண்டுள்ளான்’ என்றும், கூறி அதியமானுடன் போரிடப் போவதில்லை என்று முடிவெடுத்தான். இதனை அதியமானிடம் தெரிவிக்கும்படியும் கூறினான்.
ஒளவையாரின் அறிவு சார்ந்த செயலினால் இழப்புகளின்றி நாடும், நாட்டு மக்களும் காப்பாற்றப்பட்டனர்.
Posted in Class 8 on July 5, 2024 July 5, 2024
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Facebook
Twitter
Instagram
Pinterest
Copyright © 2026 Samacheer Kalvi
அதியமானின் அரண்மனையில் ஒளவையார் நீண்டகாலம் தங்கியிருந்தார். அப்போது தொண்டைமான், அதியமான் இருவருக்கும் நடக்கவிருந்த போரைத் தடுத்து நிறுத்தியதைப் பற்றி இக்கதையில் காண்போம்.
ஒருநாள் அதியமான் காட்டுவளத்தைக் காணச் சென்றான். திரும்பி வரும்போது அரிய நெல்லிக்கனியைக் கொண்டு வந்து ஒளவையாரிடம் கொடுத்தான். சுவைத்துப் பார்த்த ஒளவையார் இதுவரை இவ்வளவு சுவையுள்ள கனியை தான் சுவைத்ததே இல்லை என்று கூறினார்.
அமைச்சர் “இது அரிய நெல்லிக்கனி , நமது வீரர்களால் பறிக்க இயலவில்லை . நம் மன்னரே மலையுச்சியில் இருந்த மரத்தில் ஏறிப் பறித்தார்” என்று கூறினார். மேலும் “இக்கனியை உண்டவர்கள் நோய் நொடியின்றி வாழ்வார்கள்” என்றும் கூறினார்.
அதனைக் கேட்ட ஒளவையார் வியந்து அதியமானிடம் “நீ உண்ணாமல் எனக்கு ஏன் கொடுத்தாய்?” என்று கேட்டார். அதற்கு அதியமான் “என்னைப் போன்ற அரசன் இறந்து போனால் வேறு ஒருவர் அரசராகிவிடுவார். ஆனால் உங்களைப் போன்ற அறிவிற்சிறந்த புலவர் ஒருவர் மறைந்தால், அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது” என்று கூறினான். அதியமான் தமிழ் மீது கொண்ட பற்றினைக் கண்டு ஒளவையார் மனமுருகினார்.
மறுநாள் அதியமானின் கவலைகொண்ட முகத்தைக் கண்டு ஒளவையார் காரணம் கேட்டார். அதியமானும் “தொண்டைமான் போர்ச் செய்தி அனுப்பியுள்ளான்” என்று கூறினான். ஔவையார் அதியமானிடம் “எதற்கும் அஞ்சாத நீ போரைக் கண்டு அஞ்சலாமா?” என்று கேட்டார்.
அதியமான் தான் போரைக் கண்டு அஞ்சவில்லை என்றும் அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு அஞ்சுவதாகவும் கூறினான். அதியமானின் உள்ளத்தை அறிந்த ஒளவையார், அதியமானின் ஒப்புதலோடு தொண்டைமானைக் காணச் சென்றார்.
தொண்டைமானின் அரண்மனையில் படைத் தலைவருடன் உரையாடிக் கொண்டிருந்தான். அப்போது படைத்தலைவர் “அதியமான் நம் படையின் பெருக்கத்தைக் கண்டு அதிர்ந்துபோய், சமாதானம் வேண்டிப் புலவர் ஒருவரைத் தூது அனுப்பியுள்ளார்” என்று கூறினான்.
தொண்டைமான் ஒளவையாரை வரவேற்றான். போர்க்கருவிகள் நிறைந்த படைக்கலக் கொட்டிலைப் பார்க்க அழைத்துச் சென்றான். அப்படைக் கருவிகளைப் பார்த்து ஒளவையார் “அளவுக்கதிகமான கருவிகள், அழகாக அடுக்கி வைத்திருக்கும் முறை, புத்தம் புதியனவாய் நெய் பூசப்பெற்று மாலையும் மயில் தோகைகளும் அணிவிக்கப்பட்டு அழகாக உள்ளன” என்றார்.
மேலும், ‘அதியமான் எப்போதும் போர் புரிந்து கொண்டே இருப்பதால் அவனது படைக்கருவிகள் பகைவர் உடலைத் துளைத்த குருதிக் கறைகளுடன் நுனி ஒடிந்தும் கூர் மழுங்கியும் கொல்லனின் உலைக்களத்தில் கிடக்கின்றன” என்று கூறினார்.
ஒளவையாரின் பேச்சில் இருந்த உட்பொருளை உணர்ந்த தொண்டைமான். ‘தான் இதுவரை போர்க்களத்தைக் கண்டதில்லை என்றும், அதியமான் பல போர்களைக் கண்டுள்ளான்’ என்றும், கூறி அதியமானுடன் போரிடப் போவதில்லை என்று முடிவெடுத்தான். இதனை அதியமானிடம் தெரிவிக்கும்படியும் கூறினான்.
ஒளவையாரின் அறிவு சார்ந்த செயலினால் இழப்புகளின்றி நாடும், நாட்டு மக்களும் காப்பாற்றப்பட்டனர்.
Posted in Class 8 on July 5, 2024 July 5, 2024
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Facebook
Twitter
Instagram
Pinterest
Copyright © 2026 Samacheer Kalvi