Class 7 Tamil · Chapter 2

Samacheer Class 7 Tamil - இயல் 2

28 textbook Q&A28 verifiedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 2 with validation-aware solutions.

Answers marked verified were checked during generation against the chapter context and source question text.
Sections in this chapter
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 8குறு வினா 9சிறு வினா 1சிந்தனை வினா 2கற்பவை கற்றபின் 4சிறுவினா 1Book Back Questions 1பாடநூல் மதிப்பீட்டு வினா 2
Your Progress - Chapter 20% complete
1சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.8 questions
Q.1வாழை, கன்றை …………………. அ) ஈன்றது ஆ) வழங்கியது இ) கொடுத்தது ஈ) தந்ததுv
Answer:

அ) ஈன்றது

Q.2‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………… அ) காடு + டெல்லாம் ஆ) காடு + எல்லாம் இ) கா + டெல்லாம் ஈ) கான் + எல்லாம்v
Answer:

ஆ) காடு + எல்லாம்

Q.3‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ……………….. அ) பெயர் + றியா ஆ) பெயர் + ரறியா இ) பெயர் + அறியா ஈ) பெயர் + அறியாv
Answer:

இ) பெயர் + அறியா

Q.4‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ……………. அ) மன + மில்லை ஆ) மனமி + இல்லை இ) மனம் + மில்லை ஈ) மனம் + இல்லைv
Answer:

ஈ) மனம் + இல்லை

Q.3‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….. அ) காடு + ஆற ஆ) காட்டு + ஆற இ) காட் + ஆறு ஈ) காட் + டாறுv
Answer:

அ) காடு + ஆறு

Q.4‘அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………. அ) அனைத்து + துண்ணி ஆ) அனை + உண்ணி இ) அனைத் + துண்ணி ஈ) அனைத்து + உண்ணிv
Answer:

ஈ) அனைத்து + உண்ணி

Q.1வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ………………… அ) அரை ஆ) ஒன்று இ) ஒன்றரை ஈ) இரண்டுv
Answer:

ஆ) ஒன்று

Q.3சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ………………. அ) ஐகாகரக்குறுக்கம் ஆ) ஔகாகரக்குறுக்கம் இ) மகரக்குறுக்கம் ஈ) ஆய்தக்குறுக்கம்v
Answer:

ஆ) ஔகாகரக்குறுக்கம்

2குறு வினா9 questions
Q.1காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?v
Answer:

காட்டுப்பூக்களுக்குக் கார்த்திகை விளக்கை உவமையாகக்கவிஞர் சுரதாகுறிப்பிடுகிறார்.

Q.2காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?v
Answer:

காட்டிலுள்ள மலர்களைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும்.
காடு பல வகையான பொருள்களையும் காய்கனிகளையும் தரும்.
எல்லோரும் சேர்ந்துமகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும்.
காட்டு விலங்குகளுக்கு உணவாகக் கனி தரும்.

Q.3கரடி ‘அனைத்துண்ணி ‘ என அழைக்கப்படுவது ஏன்?v
Answer:

பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் என அனைத்தையும் உண்பதால் கரடி அனைத்துண்ணி’ என அழைக்கப்படுகின்றது.

Q.4மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.v
Answer:

புள்ளிமான்
சருகுமான்
மிளாமான்
வெளிமான்

Q.1ஔகாரம் எப்போது முழுமையாக ஒலிக்கும்?v
Answer:

ஔ, வௌ என ஔவைகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தன்னுடைய இரண்டு மாத்திரையில் முழுமையாக ஒலிக்கும்.

Q.2சொல்லின் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?v
Answer:

ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை
முதல் – 1 1/2 மாத்திரை
இடை – 1 மாத்திரை
கடை – 1 மாத்திரை

Q.3மகரக்குறுக்கத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.v
Answer:

1. வலம் வந்தான்
2. போன்ம்
மொழியை ஆழ்வோம்
கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்று பற்றி இரண்டு நிமிடம் பேசுக.

Q.1நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.v
Answer:

நண்பனுக்குக் கடிதம்
23, பெரியார் வீதி,
சேலம் – 3.
10.6.2019.
ஆருயிர் நண்பா !
உன் அன்பு நண்பன் எழுதும் கடிதம். நானும் என் குடும்பத்தாரும் மிகுந்த நலத்துடன் இருக்கின்றோம். நீயும் உன் குடும்பத்தாரும் நலமா?எங்கள் பள்ளியில் கடந்த வாரம் மதுரைக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள்.
அங்குச் சென்ற அனுபவத்தை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். மதுரை என்றால் இனிமை என்பதைப் பாடநூலில் தான் படித்திருக்கின்றேன். அங்குச் சென்றபோது தான் அந்த இனிமையை உணர்ந்தேன்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றேன். அங்கு எவ்வளவு நுணுக்கமான கலைநுட்பம் தெரியுமா? காணக் கண் கோடி வேண்டும் நண்பா! குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ்ப்பாடல்கள் கல்வெட்டுகளில் அங்குச் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.பின்னர் நாயக்கர் மகாலுக்குச் சென்றோம். அங்குள்ள ஒவ்வொரு தூ ணும் கதைகள் பல சொல்லும்.அங்குள்ள நாட்டிய அரங்கு மிகவும் பொலிவுடன் உள்ளது. மதுரை காமராசர் பல்கலைக் கழகம் சென்றோம்.அங்குள்ள நூலகத்தைக் கண்டு வியந்து தமிழ்ச்சங்கமே! இதுவோ? என்று நினைத்தேன். அடுத்த வாரம் நேரில் வரும் போது இன்னும் விளக்கமாகக் கூறுகின்றேன். அன்புடன் முடிக்கின்றேன்.வாழ்க வளமுடன்.
இப்படிக்கு
உயிர் நண்பன்,
ப. இளங்கதிர்
உறைமேல் முகவரி
பெறுநர்
ச.கதிரவன்,
34,புதுக் காலனி,
மொழியோடு விளையாடு
வட்டத்திலுள்ள எழுத்துக்களைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக./>
1. புதையல்
2. இயல்
3. கயல்
4. புயல்
5. கடல்
6. தையல்
7. புல்
8. கல்
9. இல்லை
10. இயல்பு(எ.கா) : வாழை + காய் – வாழைக்காய்
1. குருவி + கூடு – குருவிக்கூடு
2. விளையாட்டு + திடல் – விளையாட்டுத் திடல்
3. தயிர் + சோறு – தயிர்ச் சோறு
4. கொய்யா + பழம் – கொய்யாப் பழம்
5. விளையாட்டு + போட்டி – விளையாட்டுப்போட்டி
6. அவரை + காய் – அவரைக்காய்
விடுகதைக்கு விடை எழுதுக.

Q.3உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார்?v
Answer:

உள்ளத்தில் பொய்யில்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவர்.
கீழ்காணும் சொற்களைக் கொண்டு திருக்குறள் அமைக்க.1. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.
2. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
பின்வரும் பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.
அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் ‘அரிச்சந்திரன்’ நாடகத்தைப் பார்த்தார். அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் ‘பொய் பேசாமை’ என்னும் அறத்தை எத்தகை சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார்.
இந்த நாடகத்தைக் கண்ட காந்தியடிகள் தாமும் பொய் பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். அதனைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள் எல்லார் இதயத்திலும் இடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது.
1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
2. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

3சிறு வினா1 questions
Q.1‘காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.v
Answer:

பன்றிகள் காட்டிலுள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.
நரிக் கூட்டம் ஊளையிடும்.
மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்.
இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை ஆகிய விலங்குகள் எங்கும் அலைந்து திரியும்.

4சிந்தனை வினா2 questions
Q.1காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறக் காரணம் என்ன?v
Answer:

(i) பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அஃறிணை உயிர்களுக்குத் தேவையான உறையுள் (தங்குமிடம்) – உணவு ஆகியன காட்டில் இயற்கையாகவே உள்ளன.
(ii) மரங்கள், செடி கொடிகள் ஆகியன பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிற்குத் தங்குமிடம் மற்றும் உணவை இயற்கை அன்னையே வழங்குவதால், காட்டை இயற்கை விடுதியாகக் கவிஞர் கூறுகிறார்.

Q.1பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?v
Answer:

1. பெருங்காற்றினால் நாவல் மரம் வேரோடு வீழ்ந்து விட்டது. அதனைப் பார்க்க ஊர்மக்கள் பதற்றத்தில் விரைந்து செல்கின்றனர்.
2. குன்றுகளின் நடுவே உள்ள பெரிய மலை போல அந்த நாவல் மரம் கவிஞர் மனதில் நிற்பதால் பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தை அவர் பார்க்க விரும்பவில்லை.
3. அந்த மரம் கவிஞர் நினைவில் வாழ்கின்றது.

5கற்பவை கற்றபின்4 questions
Q.1உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக ஐந்து தொடர்கள் எழுதுக.v
Answer:

பலாமரம்
நெடுநெடுனு வளர்ந்த மரம், நேர்த்தியான பலாமரம்
முக்கனியில் இராண்டாம் கனி தரு மரம்
பெரும்பழம் சுமந்ததால் உன்மேனி இளைத்ததோ?
பழுமரத்தை நாடி பரவசமாய் பறவை வரும்
கொடுக்க குறையாத அமுதசுரபி மரம் பலாமரம்

Q.2உங்கள் பகுதியிலுள்ள மரங்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.v
Answer:

வேப்ப மரம், புளிய மரம், அரசமரம், ஆல மரம், வாழை மரம், முருங்கை மரம், தென்னை மரம், பனை மரம், பாக்கு மரம், பலா மரம், தேக்கு மரம், சந்தன மரம், அத்தி மரம், வாகை மரம், புங்க மரம்.

Q.1விலங்குகள் தொடர்பான பழமொழிகளைத் திரட்டி வருக.v
Answer:

1. பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி
(எ.கா.) : புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
2. சாது மிரண்டால் காடு கொள்ளாது.
3. யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே.
4. நொண்டிக் கழுதைக்குச் சருக்கினது சாக்காம்.
5. வீட்டில் எலி, வெளியில் புலி.
6. நாயப் பொறந்தாலும் நல்லாப் பொறக்கனும்.
7. கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசைன.
8. ஆடு மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராசா.
9. தூங்கணாங் குருவிக்குக் குரங்கு புத்தி சொல்லுச்சாம்.

Q.2காட்டு விலங்குகளின் படங்களைத் திரட்டி படத்தொகுப்பு உருவாக்குக.v
Answer:

6சிறுவினா1 questions
Q.1நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?v
Answer:

1. ஊரின் வட எல்லையில் ஐந்து வயதில் பார்த்த போதும், ஐம்பது வயதைத் தாண்டி இப்பொழுது பார்க்கின்ற போதும், தாத்தாவின் தாத்தா நட்டு வைத்த நாவல் மரம் அப்படியே இருக்கின்றது.
2. அந்த நாவல் மரத்தில் பச்சைக்காய்கள் மாறி செந்நிறமாய்ப் பழுக்கும் போது சிறுவர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கும்.
3. பளபளக்கும் பச்சை இலைகளுடக் கருநீலக்கோலிக்குண்டுகள் போல நாவற்பழங்கள் கிளைகளில் தொங்குவதைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும்.
4. காக்கை, குருவி, மைனா, பெயரறியாப் பவைகள், அணில், காற்று ஆகின உதிர்த்துவிடும் நாவல் பழங்களைப் பொறுக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
5. தங்கைகள் தங்கள் அக்காக்களுக்காகக் கையில் பெட்டியுடன் நாவல்பழம் பொறுக்குகின்றனர்.
6. இரவின் மெல்லிய நிலா வெளிச்சத்தில் பழந்தின்னி வௌவால் கூட்டம் மரத்தில் பழம் தின்னப் படை எடுக்கும்.
7. அப்பா வரும் வரை நாவல் மர நிழலில் கிளியாந்தட்டு விளையாடுவோம். நேற்று நண்பகல் என் மகன் விளையாடியதும் இந்த நாவல் மர நிழலில்தான்.

7Book Back Questions1 questions
Q.1ஐகார, ஔகார, மகர, ஆய்தக்குறுக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் சொற்களைத் தொகுத்தெழுதுக.v
Answer:

எடுத்துக்காட்டு :

8பாடநூல் மதிப்பீட்டு வினா2 questions
Q.2……………. செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும். அ) மன்னன் ஆ) பொறாமை இல்லாதவன் இ) பொறாமை உள்ளவன் ஈ) செல்வந்தன்v
Answer:

இ) பொறாமை உள்ளவன்

Q.3‘பொருட்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ……………… அ) பொரு + செல்வம் ஆ) பொருட் + செல்வம் இ) பொருள் + செல்வம் ஈ) பொரும் + செல்வம்v
Answer:

இ) பொருள் + செல்வம்