Class 7 Tamil · Chapter 4

Samacheer Class 7 Tamil - இயல் 4

33 textbook Q&A33 verifiedFree Content

Chapter-wise textbook exercise answers for இயல் 4 with validation-aware solutions.

Answers marked verified were checked during generation against the chapter context and source question text.
Sections in this chapter
கற்பவை கற்றபின் 6சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 13குறு வினா 2சிறு வினா 4சிந்தனை வினா 3சிறுவினா 5
Your Progress - Chapter 40% complete
1கற்பவை கற்றபின்6 questions
Q.2‘கலங்கரை விளக்கம்’ – மாதிரி ஒன்று செய்து வருக.v
Answer:

மாணவர் செயல்பாடு

Q.3கடலும், கலங்கரை விளக்கமும் – ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுக.v
Answer:

Q.2கடற்பயணம் பற்றிய சிறுகதை ஒன்றனை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.v
Answer:

கடல் – எஸ்.கண்ண ன்
அவன் ஒரு இளைஞன். அவனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். கள்ளச்சாரயம் குடித்து அவன் அப்பா இறந்துவிட்டார். அம்மா மற்றும் திருமண வயதில் தங்கை அவனுக்கு. அவனுக்குக் கிடைத்த வேலையில் குடும்பத்தை நடத்தவே பணம் போதவில்லை. தங்கையின் திருமணத்தை எப்படி நடத்தப் போகிறோம் என்ற கவலையே அவனுக்குப் பெரிதாக இருந்தது.
மனதின் நிம்மதிக்காக அனைவரும் கடற்கரை நோக்கிச் செல்வர். அவனும் அப்படியும் சில நாட்கள் சென்றான். கை நிறைய எப்போது சம்பாதிப்பது? எப்போது தங்கைக்குத் திருமணம் செய்வது? இவை அவன் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. ஒரு நாள் தற்கொலை செய்யலாம் என்ற எண்ணத்துடன் கரையோரம் அமர்ந்து இருந்தான். அது இரவு நேரம் கடற்கரையில் யாருமில்லை.
கடல் நீர் அவன் வேதனை போல் உப்பாகவே இருந்தது. தூரத்தில் யாரோ கடலை நோக்கி ஒடுவது போல் இருந்தது. இவன் அவளைக் காப்பாற்றினான். அவளது அப்பா, அம்மா ஓடோடி வந்தனர். திருமணம் ஆன மூன்று மாதத்தில் கணவன் இறந்ததால் அவள் இத்தகைய முடிவுக்கு வந்ததை அறிந்தான்.
அந்தப் பெண்ணின் அப்பா, பெரிய கார் நிறுவனத்தின் முதலாளி. இவன் நிலையை அறிந்து, அவனுக்கு வேலையும் கொடுத்து, அவனது தங்கைக்கும் திருமணம் செய்து வைத்தார். அவனது நன்னடத்தையால் நிறுவனத்தின் எம்.டி. ஆக உயர்ந்தான். முதலாளி அவரது பெண்ணையும் திருமணம் செய்து வைக்கின்றார். மீண்டும் தனக்கு வாழ்வு தந்த கடற்கரைக்குச் செல்கின்றான். அலை ஆனந்தத்துடன் ஆர்ப்பரித்து, அவன் மீது விழுந்தது. இன்பத்தில் கடல் நீர் இனிமையானது.

Q.1பல்வகையான கப்பல்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.v
Answer:

Q.1ஆழ்கடல் காட்சியொன்றைக் கற்பனையாகப் படம் வரைந்து வண்ணம் தீட்டுக.v
Answer:

Q.2நீர்மூழ்கிக் கப்பல் இயங்கும் முறைபற்றிய செய்திகளைத் திரட்டி தொகுத்து எழுதுக.v
Answer:

தண்ணீரில் ஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுள்ள நீரை வெளியேற்றினால் மட்டுமே அப்பொருள் மிதக்கும் என்பது ஆர்க்கிமிடிஸ் தத்துவம்.
அதன் அடிப்டையில் தான் நீர் மூழ்கிக்கப்பல்கள் இயங்குகின்றன.
சரளைத் தொட்டிகள் நீர் மூழ்கிக் கப்பல்களைச் சுற்றி வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
இது காற்றால் நிரப்பப்பட்டு இருக்கும். சுற்றிக் காற்று இருப்பதால், நீரில் இருக்கும் காற்றை வெளியேற்றினால் இந்த இடத்தில் நீரானது நிரம்பும்.
இப்படி நிரம்பினால் எடை அதிகரிக்கும் கப்பல் நீரில் மூழ்கும்.

2சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.13 questions
Q.2உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் அ) காற்று ஆ) வானம் இ) கடல் ஈ) மலைv
Answer:

இ) கடல்

Q.3கடலில் துறை அறியாமல் கலங்குவன ……………….. அ) மீன்கள் ஆ) மரக்கலங்கள் இ) தூண்கள் ஈ) மாடங்கள்v
Answer:

ஆ) மரக்கலங்கள்

Q.1இயற்கை வங்கூழ் ஆட்ட – அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ………………… அ) நிலம் ஆ) நீர் இ) காற்று ஈ) நெருப்புv
Answer:

இ) காற்று

Q.2மக்கள் ……………. ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர். அ) கடலில் ஆ) காற்றில் இ) கழனியில் ஈ) வங்கத்தில்v
Answer:

ஈ) வங்கத்தில்

Q.4‘பெருங்கடல்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) பெரு + கடல் ஆ) பெருமை + கடல் இ) பெரிய + கடல் ஈ) பெருங் + கடல்v
Answer:

ஆ) பெருமை + கடல்

Q.5இன்று + ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது. அ) இன்று ஆகி ஆ) இன்றி ஆகி இ) இன்றாகி ஈ) இன்றாஆகிv
Answer:

இ) இன்றாகி

Q.6எதுகை இடம்பெறாத இணை …………….. அ) இரவு – இயற்கை ஆ) வங்கம்-சங்கம் இ) உலகு -புலவு ஈ) அசைவு – இசைவுv
Answer:

அ) இரவு – இயற்கை
பொருத்துக
1. வங்கம் – பகல்
2. நீகான் – கப்பல்
3. எல் – கலங்கரை விளக்கம்
4. மாட ஒள்ளெரி – நாவாய் ஓட்டுபவன்
1. வங்கம் – கப்பல்
2. நீகான் – நாவாய் ஓட்டுபவன்
3. எல் – பகல்
4. மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்

Q.1தமிழரின் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ………………… அ) கலம் ஆ) வங்கம் இ) நாவாய் ஈ) ஓடம்v
Answer:

ஈ) ஓடம்

Q.2தொல்காப்பியம் கடற்பயணத்தை ………………… வழக்கம் என்று கூறுகின்றது. அ) நன்னீர் ஆ) தண்ணீ ர் இ) முந்நீர் ஈ) கண்ணீ ர்v
Answer:

இ) முந்நீர்

Q.3கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி அ) சுக்கான் ஆ) நங்கூரம் இ) கண்டை ஈ) சமுக்குv
Answer:

அ) சுக்கான்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் ……………… என அழைக்கப்படும்.
2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது ……………………
3. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் ……………….. எனக்குறிக்கப்படும்.
1. தொகுதி
2. நங்கூரம்
3. கண்ணடை
பொருத்துக.
1. எரா – திசைகாட்டும் கருவி
2. பருமல் – அடிமரம்
3. மீகாமன் – குறுக்கு மரம்
4. காந்த ஊசி – கப்பலைச் செலுத்துபவர்
1. எரா – அடிமரம்
2. பருமல் – குறுக்கு மரம்
3. மீகாமன் – கப்பலைச் செலுத்துபவர்
4. காந்த ஊசி – திசைகாட்டும் கருவி
தொடர்களில் அமைத்து எழுது.
1. நீரோட்டம் – ஆழ்துளைக்கிணறு அமைக்கும் முன்னர் நீரோட்டம் பார்ப்பர்.
2. காற்றின் திசை – கப்பலைக் காற்றின் திசைக்கேற்ப செலுத்துவர்.
3. வானியல் அறிவு – தமிழர் வானியல் அறிவில் சிறந்து விளங்கினர்.
4. ஏற்றுமதி – பண்டைய காலத்தில் கடல்வணிகம் மூலம் ஏற்றுமதி நடைபெற்றது.

Q.1எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல் ………………… அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ) வடசொல்v
Answer:

அ) இயற்சொல்

Q.2பலபொருள் தரும் ஒரு சொல் என்பது ……………. அ) இயற்சொல் ஆ) திரிசொல் இ) திசைச்சொல் ஈ) வடசொல்v
Answer:

ஆ) திரிசொல்

Q.3வடமொழி என்று அழைக்கப்படும் மொழி ……………. அ) மலையாளம் ஆ) கன்னடம் இ) சமஸ்கிருதம் ஈ) தெலுங்குv
Answer:

இ) சமஸ்கிருதம்
பொருத்துக.
1) இயற்சொல் – பெற்றம்
2) திரிசொல் – இரத்தம்
3) திசைச்சொல் – அழுவம்
4) வடசொல் – சோறு
1) இயற்சொல் – சோறு
2) திரிசொல் – அழுவம்
3) திசைச்சொல் – பெற்றம்
4) வடசொல் – இரத்தம்

3குறு வினா2 questions
Q.2கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?v
Answer:

கலங்கரை விளக்கில் இரவுநேரத்தில் விளக்கு ஏற்றப்படும்.

Q.3கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களை க் கூறுக.v
Answer:

எரா
பருமல்
வங்கு
கூம்பு
பாய்மரம்
சுக்கான்
நங்கூரம் – போன்றவை கப்பல் உறுப்புகள் ஆகும்.

4சிறு வினா4 questions
Q.1கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகள் யாவை?v
Answer:

(i) கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழாமல் தாங்கிக்கொண்டு இருக்கும் தூண் போலத் தோற்றம் அளிக்கின்றது.
(ii) அது ஏணி கொண்டு ஏறமுடியாத அளவுக்கு உயரத்தைக் கொண்டு இருக்கின்றது.
(iii) வைக்கோல் ஆகியவற்றால் வேயப்படாமல் வலிமையான சாந்து (சுண்ணாம்பு) பூசப்பட்ட வானத்தை முட்டும் மாடத்தை உடையது.
(iv) அம் மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை (எல்லை) அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறை (எல்லை) நோக்கி அழைக்கின்றது.

Q.1சிறிய நீர்நிலைகளையும் கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக.v
Answer:

சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள் :
தோணி
ஓடம்
படகு
பணை
மிதவை
தெப்பம்
கடல்களைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள் :
கலம்
வங்கம்
நாவாய்

Q.2பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றிக் கூறுக.v
Answer:

(i) காற்றின் திசை அறிந்து கப்பல்கள் செலுத்தும் முறையைத் தமிழர் நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
(ii) கடலில் காற்று வீசும் திசை, நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் நன்கு அறிந்து வைத்து, உரிய காலத்தில் உரிய திசையில் கப்பலைச் செலுத்தினர்.
(iii) திசைகாட்டும் கருவி மற்றும் விண்மீன்களின் நிலையை வைத்து திசையை அறிந்து கப்பலைச் செலுத்தினர்.
(iv) சிறந்த வானியல் அறிவை மாலுமிகள் பெற்றிருந்தனர்.
(v) கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும் கடல் நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து சரியான காலத்தில் கப்பலைச் செலுத்தினர்.

Q.3கப்பல் பாதுகாப்பானதாக அமையத் தமிழர்கள் கையாண்ட வழிமுறைகள் யாவை?v
Answer:

(i) கப்பல் தண்ணீரிலேயே இருப்பவை என்பதால் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத மரங்களையே பயன்படுத்தினர்.
(ii) நீர்மட்டவைப்பிற்கு வேம்பு, இலுப்பை, புன்னை, நாவல் மரங்களையும் பக்கங்களுக்குத் தேக்கு, வெண் தேக்கு மரங்களைப் பயன்படுத்தினர்.
(iii) சுழி உடைய மரங்களைத் தவிர்த்தனர்.
(iv) மரங்களையும் பலகைகளையும் ஒன்றோடு ஒன்றாக இணைக்க இடையே தேங்காய் நார் (அல்லது) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இருக்கி ஆணிகளை அறைந்தனர்.
(v) சுண்ணாம்பையும் சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இதனால் கப்பல் பழுதடையாமல் நீண்டகாலம் உழைத்தன.
(vi) இரும்பு துருப்பிடிக்கும் என்பதால் மரஆணிகளைப் பயன்படுத்தினர்.

5சிந்தனை வினா3 questions
Q.1கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும் என நீங்கள் கருதுகிறீர்கள்?v
Answer:

கடல் ஆய்வு செய்பவர்கள்
மீனவர்கள்
கப்பற் படை வீரர்கள்
கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள்

Q.1தரைவழிப்பயணம் , கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நீங்கள் விரும்புவது எது? ஏன்?v
Answer:

தரைவழிப்பயணம், கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நான் விரும்புவது : கடல்வழிப் பயணம்.
காரணம் :
கடலின் அழகைக் கண்டு மகிழவும், கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும், கடல் தீவுகளின் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழவும் கடல்வழிப் பயணமே சிறந்தது. எனவே, நான் கடல்வழிப் பயணத்தை விரும்புகின்றேன்.

Q.1இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாதது ஏன் எனச் சிந்தித்து எழுதுக.v
Answer:

கப்பலில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தால் நீண்டநாட்கள் பயணம் செய்யவேண்டும். அதனால் கால விரையம் ஏற்படும்.
அதிவிரைவுக்குக் கடற்பயணம் பயன்படுவதில்லை .
கடல் உயிரினங்கள் மற்றும் புயல் போன்றவை அச்சத்தை ஏற்படுத்தும்.
அதிகபொருட்செலவை ஏற்படுத்தும்.
– போன்ற காரணங்களால் இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளவில்லை.

6சிறுவினா5 questions
Q.1கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு எவ்வாறு விளக்குகிறது?v
Answer:

உலகம் இடம்பெயர்ந்தது போன்று அழகிய தோற்றமுடையது நாவாய்.
அது புலால் நாற்றம் உடைய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும்.
இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும்.
உயர்ந்த தரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்.
– என்று கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு விளக்குகிறது.

Q.3பண்டிகை, கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக.v
Answer:

பண்டிகை, கேணி என்பன திசைச்சொற்கள் ஆகும்.
விளக்கம் :
பண்டிகை, கேணி ஆகிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அன்று. வடமொழி தவிர பிறமொழிகளிலிருந்து வந்த சொற்கள் திசைச்சொற்கள் ஆகும்.
மொழியை ஆள்வோம்
கேட்க

Q.1அமுதன் நேற்று வீட்டுக்கு வருவான்.v
Answer:

அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான்.

Q.3மாடுகள் இப்பொழுது புல் மேயும்.v
Answer:

மாடுகள் இப்பொழுது புல் மேய்கிறது.

Q.1முன்னுரை – பயணத்தின் தேவை – தரைவழிப்பயணம் – கடல்வழிப்பயணம் – வான்வழிவழிப் பயணம் – முடிவுரைv
Answer:

முன்னுரை :
பயணம் என்பது சங்ககாலம் முதல் நிகழ்ந்து வருகின்றது. நடைபயணமாகத் தொடங்கிய பயணத் தோற்றம் அறிவியல் வளர்ச்சியால் இன்று பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. பயண நேரம் இன்று மிகவும் சுருங்கிவிட்டது.
பயணத்தின் தேவை :
மனிதன் தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்காவும், பண்டமாற்று முறைக்காகவும், பொருட்களைவாங்கவும் விற்கவும் சந்தைப்படுத்தவும். தம் உறவினர் மற்றும் நண்பர்களைத் தொடர்பு கொள்வதற்கும், மருத்துவத் தேவைக்காகவும் பயணத்தின் தேவை ஏற்பட்டது. பயணத்தின் தன்மைக் கேற்ப தரைவழிப்பயணம், கடல்வழிப்பயணம், வான்வழிவழிப் பயணம் என வகைப்படுத்தப்பட்டது.
தரை வழிப்பயணம் :
பழங்காலம் முதல் தரைவழிப்பயணமே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நடைபயணமாகவே ஆரம்ப கால கட்டத்தில் பயணம் மேற்கொள்ளப்பட்டது.மாட்டு வண்டி, குதிரை வண்டியின் மூலம் நடைபெற்ற தரைவழிப் பயணம். பின்னர் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக மிதிவண்டி, மகிழ்வுந்து, பேருந்து, சரக்குந்து, தொடர்வண்டி ஆகியவை மூலம் தரைவழிப்பயணம் விரைவாக மேற்கொள்ளப்பட்டது.
கடல்வழிப்பயணம் :
கப்பல் போன்றவற்றில் கடல்வழியாகச் செல்லும் பயணம் கடல்வழிப்பயணம் ஆகும். கடலின் அழகைக் கண்டு மகிழவும், கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்கவும், கடல் தீவுகளின் இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழவும் கடல்வழிப் பயணமே சிறந்தது. தீவுகள் மற்றும் வெகு தொலைவு நாடுகளுக்குப் பொருட்களை அனுப்பவும் , அயல் நாடுகளுக்கு வணிகம் செய்யவும் கடல்வழிப்பயணம் பயன்பட்டது.
வான் வழிப்பயணம் :
விமானம் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வான்வழியில் பயணம் மேற்கொள்வது வான்வழிப்பயணம் ஆகும். தரை மற்றும் கப்பல் வழி பயணங்களைவிடச் சிறந்தது வான்வழிப்பயணம். பல நாட்கள் செல்ல வேண்டிய பயணத்தை ஒருசில மணி நேரங்களிலேயே செல்லலாம். அதிவிரைவுக்கு ஏற்றது வான்வழிப் பயணம்.முடிவுரை :
பயணம் செய்வதில் பாதுகாப்பான முறைகளை அறிந்து பயன்படுவது பயணிகளாகிய நம் கடமையாகும். பயணத்தில் வீண் விளையாட்டுக்களைத் தவிர்க்க வேண்டும்.
(“பயணத்தில் தேவை கவனம்”)
மொழியோடு விளையாடு
குறுக்கெழுத்துப் புதிர்
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அறிவோம்.இடமிருந்து வலம்
1. அச்சான் – தந்தை
2. விஞ்ஞானம் – அறிவியல்
4. பரீட்சை – தேர்வு
10. லட்சியம் – இலக்கு
வலமிருந்து இடம்
6. அபாயம் – இடர்
8. தேகம் – உடல்
13. சரித்திரம் – வரலாறு
14. சத்தம் – ஒலி
மேலிருந்து கீழ்
1. அதிபர் – தலைவர்
3. ஆச்சரியம் – வியப்பு
7. ஆரம்பம் – தொடக்கம்
12. சதம் – நூறு
கீழிருந்து மேல்
5. ஆதி – முதல்
9. உத்தரவு – கட்டளை
11. தினம் -நாள்
15. சந்தோசம் – மகிழ்ச்சி
குறிப்புகளைக் கொண்டு ‘மா’ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டறிந்து கட்டங்களை நிரப்புக.நிற்க அதற்குத் தக..
கலைச்சொல் அறிவோம்
1. கலங்கரை விளக்கம் – Light house
2. பெருங்கடல் – Ocean
3. கப்பல் தொழில் நுட்பம் – Marine technology
4. கடல்வாழ் உயிரினம் – Marine creature
5. நீர் மூழ்கிக் கப்பல் – Submarine
6. துறைமுகம் – Harbour
7. புயல் – Storm
8. மாலுமி – Sailor
9. நங்கூரம் – Anchor
10. கப்பல் தளம் – Shipyard